குமாரசாமி முதல்வர் என பேரம் பேசியபோதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது: ராகுலுக்கு அமித் ஷா பதில்

Published:

amith sha ediyurappa - 2026

கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்தான் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக., தலைவர் அமித்ஷா. குமாரசாமியே முதல்வர் என அறிவித்து பேரம் பேசியபோதே, காங்கிரஸ் ஒரு ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி விட்டது என அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் தற்போது நடைபெறும் சம்பவங்களின் மூலம், இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடி ரூபாய் தருவதாகக் கூறி பாஜக பேரம் பேசுவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறுவதை ராகுல் சுட்டிக் காட்டி தன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.

அவரது டிவிட்டர் பதிவு:

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img