நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

hui mosque in china - 2026

பீஜிங்: எல்லா மசூதிகளிலும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் தேசியக் கொடியைப் பறக்க விட வேண்டும். இந்தக் கண்டிப்பான உத்தரவு நிச்சயமாக இங்கல்ல, அண்டை நாடான கம்யூனிஸ சீனாவில்தான்!

சீனாவின் மிக முக்கியமான இஸ்லாமிய ஒருங்கமைப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, அந்த அமைப்பு இத்தகைய நெறிமுறையைக் கூறியுள்ளது. சீன நாட்டின் கொடி, மசூதிகளில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் பிரதான இடத்தில் பறக்கவிடப் படவேண்டும். இந்தத் தகவலை சீன இஸ்லாமிய அசோஷியேஷன் தனது இணையதளத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையால் தேசிய மற்றும் சமூக அடையாளத்தை சரியான வகையில் இஸ்லாமியர்கள் பெற வழி செய்யும் என்றும், அவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீன இஸ்லாமிய அசோசியேஷன், அரசு சார் அமைப்பு என்பதுடன், இமாம்களை தேர்வு செய்வதும் இந்த அமைப்பின் முக்கிப் பணி. அந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்படுவதால், அரசின் கொள்கைகளை அது செயல்படுத்தியாகவேண்டும்.

மேலும், சீனாவில் புதிய மதக்கட்டுப்பாட்டு சட்ட திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதாலும், மசூதிகளில் பணிபுரியும் நபர்கள் சீன சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு அதன்படி நடப்பதுடன், மதக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி செயல்படவேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள மசூதிகளில் சீன தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் !

கம்யூனிஸ சித்தாந்தக் கருத்துக்களை மசூதிகளில் எழுதி வைக்க வேண்டும் !

சீனாவில் தோன்றிய முஸ்லீம் பிரபலங்களைப் பற்றி மட்டுமே போதிக்க வேண்டும் ! அயல் நாட்டவர்களைப் பற்றி போதிக்கக் கூடாது!

ஆனால், உலகில் அதிக அளவு இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட நாடு என்று கூறப்படும் இந்தியாவில் நிலை என்ன?

இப்போது எந்த இந்திய கம்யூனிஸ்டும் எவரும் சீனாவைப் பார் என்று பேச மாட்டார்கள்! இந்தியாவில் இந்திய தேசியக் கொடி கூட வேண்டாம் … ஐ.எஸ்.ஐ.எஸ்., டி-ஷர்டுடன், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடி பிடிக்கும் முஸ்லீம்களையாவது சீனச் சிகப்புப் பிரஜைகளான இந்திய கம்யூனிஸ்டுகள் கண்டிப்பார்களா?

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories