ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்; போலீசார் வாகனம் மீது கல் வீச்சு

09 May 22 strailaite - 2026ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. அங்கு போராட்டங்களை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலையின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரெட்டியபுரம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பிப்ரவரி 5ம் தேதி தங்களது போராட்டத்தை துவங்கினர். அந்த போராட்டமானது இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் இதற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய வியாபார சங்கத்தை சேர்ந்த சுமார் 65 கிளை சங்கங்களின் 40,000 உறுப்பினர்கள் கடைகளை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது தடையை மீறி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் சுமார் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories