December 5, 2025, 9:20 PM
26.6 C
Chennai

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்; போலீசார் வாகனம் மீது கல் வீச்சு

09 May 22 strailaite - 2025ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. அங்கு போராட்டங்களை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலையின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரெட்டியபுரம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பிப்ரவரி 5ம் தேதி தங்களது போராட்டத்தை துவங்கினர். அந்த போராட்டமானது இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் இதற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய வியாபார சங்கத்தை சேர்ந்த சுமார் 65 கிளை சங்கங்களின் 40,000 உறுப்பினர்கள் கடைகளை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது தடையை மீறி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் சுமார் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories