December 5, 2025, 5:07 PM
27.9 C
Chennai

பிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்!

01 09 May Narendra Modi - 2025

புது தில்லி: இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை மாற்றும் பணிக்கான பயணத்தை தாங்கள் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது, துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள மோடி,, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்கு பெற்றிருப்பதாக ஒவ்வொரு குடிமகனும் உணர்கிறான் என்று கூறியுள்ளார். 125 கோடி இந்தியர்களும் இணைந்து, இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தலை வணங்குவதாகக் கூறியுள்ள மோடி, இந்த அன்பும் ஆதரவுமே ஒட்டுமொத்த அரசின் வலிமை மற்றும் ஊக்கத்திற்கு பெரும் ஆதாரமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இருப்பதாக உறுதி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி, தங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முதன்மை; புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முடிவுகளை சிறந்த நோக்கம் மற்றும் நேர்மையுடன் எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசின் சார்பிலும் அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்த பட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும் வகையில் வரி ஏய்ப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. பினாமி சொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய சட்ட ரீதியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறும் திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டது, ரூ. 2 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப்படுதல், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கி.மீ., ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது, என இந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories