ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லிம் பிரிவு மூலம் மும்பையில் முதல்முறையாக இப்தார் விருந்து!

Published:

rss muslim wing - 2026

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முஸ்லிம் பிரிவு சார்பில் முதல் முறையாக ‘இப்தார்’ விருந்து அளிக்கப்படுகிறது.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் முஸ்லிம் மக்களுக்கு இப்தார் விருந்து அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தமது முஸ்லிம் பிரிவான எம்.ஆர்.எம்., எனப்படும் ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’ மூலம், இப்தார் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து எம்.ஆர்.எம்., தேசிய ஒருங்கிணைப்பாளர் விராக் பச்போரே கூறியபொது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் ஜூன் 4ல் மும்பையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும்படி 30 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் 200 முக்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் இந்த விருந்தில் பங்கேற்பார்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில், அமைதி, நம்பிக்கை, தேசபக்தி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தவே விரும்புகிறது என்றார் அவர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஏற்கெனவே கடந்த வருடம் உ.பி.யில் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் மூலம் இப்தார் விருந்து அளிக்கப்பட்ட போது, பாலும் பால் பொருள்களும் வழங்கி, சைவ இப்தார் விருந்து வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையானது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img