கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

Published:

22 May 22 kumara samy - 2026

கர்நாடக மாநிலத்தில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி ‘பளிச்’செனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக இருந்துவரும் நிலையில், அண்மையில் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி அரசியல் குறித்தும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

kaala june7 - 2026

கர்நாடகத்தில் காவிரி பாயும் பாசனப் பகுதியான மாண்டியா பகுதியில் செல்வாக்கு பெற காவிரி அரசியலை முக்கியமான விஷயமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் மட்டும் சட்டமன்றத் தேர்தலில் வென்ற மஜத., கட்சியின் குமாரசாமி, காவிரி அரசியலை இப்போதும் தொடர்கிறார். அதற்குச் சான்றுதான், மத்திய அரசின் தீவிர முயற்சியில் கொண்டு வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் ஒத்துழைப்பு கொடுக்காமல், மேலும் இழுபறியை நீட்டிக்க வேலையை செய்து வருகிறார் குமாரசாமி.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்நிலையில் காவிரியையும் திரைப்படத்தையும் முடிச்சு போடக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், குமாரசாமி தனது முடிவில் உறுதியாக உள்ளார். மேலும் காலா படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்து, குமாரசாமி சொன்ன விஷயம்தான் மிகவும் அபாயகரமான ஒன்றாகத் தெரிகிறது.  காலா படத்தை வெளியிட்டால் ஏற்படும் விளைவுக்கு தயாரிப்பாளரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் அந்த நிலைப்பாடு. மேலும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் குமாரசாமி.

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.

காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி போராட்டம் நடத்திய தமிழர்கள், அப்போதே காங்கிரஸையும் குமாரசாமியையும் கேள்வி கேட்டுப் போராடியிருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காது என்பதுதான் தமிழகத்தில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img