கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

22 May 22 kumara samy - 2026

கர்நாடக மாநிலத்தில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி ‘பளிச்’செனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக இருந்துவரும் நிலையில், அண்மையில் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி அரசியல் குறித்தும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

kaala june7 - 2026

கர்நாடகத்தில் காவிரி பாயும் பாசனப் பகுதியான மாண்டியா பகுதியில் செல்வாக்கு பெற காவிரி அரசியலை முக்கியமான விஷயமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் மட்டும் சட்டமன்றத் தேர்தலில் வென்ற மஜத., கட்சியின் குமாரசாமி, காவிரி அரசியலை இப்போதும் தொடர்கிறார். அதற்குச் சான்றுதான், மத்திய அரசின் தீவிர முயற்சியில் கொண்டு வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் ஒத்துழைப்பு கொடுக்காமல், மேலும் இழுபறியை நீட்டிக்க வேலையை செய்து வருகிறார் குமாரசாமி.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்நிலையில் காவிரியையும் திரைப்படத்தையும் முடிச்சு போடக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், குமாரசாமி தனது முடிவில் உறுதியாக உள்ளார். மேலும் காலா படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்து, குமாரசாமி சொன்ன விஷயம்தான் மிகவும் அபாயகரமான ஒன்றாகத் தெரிகிறது.  காலா படத்தை வெளியிட்டால் ஏற்படும் விளைவுக்கு தயாரிப்பாளரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் அந்த நிலைப்பாடு. மேலும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் குமாரசாமி.

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.

காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி போராட்டம் நடத்திய தமிழர்கள், அப்போதே காங்கிரஸையும் குமாரசாமியையும் கேள்வி கேட்டுப் போராடியிருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காது என்பதுதான் தமிழகத்தில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories