December 5, 2025, 9:03 PM
26.6 C
Chennai

கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

22 May 22 kumara samy - 2025

கர்நாடக மாநிலத்தில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி ‘பளிச்’செனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக இருந்துவரும் நிலையில், அண்மையில் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி அரசியல் குறித்தும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

kaala june7 - 2025

கர்நாடகத்தில் காவிரி பாயும் பாசனப் பகுதியான மாண்டியா பகுதியில் செல்வாக்கு பெற காவிரி அரசியலை முக்கியமான விஷயமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் மட்டும் சட்டமன்றத் தேர்தலில் வென்ற மஜத., கட்சியின் குமாரசாமி, காவிரி அரசியலை இப்போதும் தொடர்கிறார். அதற்குச் சான்றுதான், மத்திய அரசின் தீவிர முயற்சியில் கொண்டு வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் ஒத்துழைப்பு கொடுக்காமல், மேலும் இழுபறியை நீட்டிக்க வேலையை செய்து வருகிறார் குமாரசாமி.

இந்நிலையில் காவிரியையும் திரைப்படத்தையும் முடிச்சு போடக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், குமாரசாமி தனது முடிவில் உறுதியாக உள்ளார். மேலும் காலா படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்து, குமாரசாமி சொன்ன விஷயம்தான் மிகவும் அபாயகரமான ஒன்றாகத் தெரிகிறது.  காலா படத்தை வெளியிட்டால் ஏற்படும் விளைவுக்கு தயாரிப்பாளரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் அந்த நிலைப்பாடு. மேலும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் குமாரசாமி.

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.

காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி போராட்டம் நடத்திய தமிழர்கள், அப்போதே காங்கிரஸையும் குமாரசாமியையும் கேள்வி கேட்டுப் போராடியிருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காது என்பதுதான் தமிழகத்தில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories