காவிரி விவகாரம்; கர்நாடகத்தை நெருக்கும் மத்திய அரசு: குமாரசாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் திமுக.,!

CauveryManagementAuthority member masood - 2026

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழகமும், புதுச்சேரியும் பிரதிநிதிகளை நியமித்த பின்னரும், கர்நாடகம் இன்னும் மௌனமாக இருந்து, ஆணையப் பணிகளை தாமதப் படுத்தி வருகிறது. இதை அடுத்து, பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. அதே நேரம், கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், பாஜக., தோற்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் காவிரி விவகாரத்தை எழுப்பி நெருக்கடி கொடுத்து தீவிர வன்முறை அரசியலில் ஈடுபட்ட திமுக., உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், இப்போது வாய்மூடி, தங்கள் வேலை முடிந்துவிட்டது போல் மௌனமாகக் கிடக்கின்றன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகார பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதை அடுத்து, தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகளின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டனர். இந் நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயரை அறிவிக்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தாமதப் பட்டு வருவதை மத்திய அரசு சுட்டிக் காட்டியது. தற்போது பருவமழைக் காலம் என்பதாலும், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, குறுவை சாகுபடிக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்பதாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாக செயல்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், கர்நாடக அரசு ஆணையப் பணிகளை விரும்பவில்லை. இந்த ஆணையத்தால் சாதகமா பாதகமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு, இன்னமும் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை. இதனால் மேலும் இந்த விவகாரம் சிக்கலாகும் என்பதை உணர்ந்து, கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தை அதன் தற்காலிகத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்து, தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் செய்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல், இப்போது கர்நாடக அரசை எதிர்க்க விருப்பமில்லாமல், வாய்மூடிக் கிடக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories