காவிரி விவகாரம்; கர்நாடகத்தை நெருக்கும் மத்திய அரசு: குமாரசாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் திமுக.,!

CauveryManagementAuthority member masood - 2026

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழகமும், புதுச்சேரியும் பிரதிநிதிகளை நியமித்த பின்னரும், கர்நாடகம் இன்னும் மௌனமாக இருந்து, ஆணையப் பணிகளை தாமதப் படுத்தி வருகிறது. இதை அடுத்து, பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. அதே நேரம், கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், பாஜக., தோற்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் காவிரி விவகாரத்தை எழுப்பி நெருக்கடி கொடுத்து தீவிர வன்முறை அரசியலில் ஈடுபட்ட திமுக., உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், இப்போது வாய்மூடி, தங்கள் வேலை முடிந்துவிட்டது போல் மௌனமாகக் கிடக்கின்றன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகார பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இதை அடுத்து, தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகளின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டனர். இந் நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயரை அறிவிக்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தாமதப் பட்டு வருவதை மத்திய அரசு சுட்டிக் காட்டியது. தற்போது பருவமழைக் காலம் என்பதாலும், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, குறுவை சாகுபடிக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்பதாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாக செயல்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், கர்நாடக அரசு ஆணையப் பணிகளை விரும்பவில்லை. இந்த ஆணையத்தால் சாதகமா பாதகமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு, இன்னமும் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை. இதனால் மேலும் இந்த விவகாரம் சிக்கலாகும் என்பதை உணர்ந்து, கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தை அதன் தற்காலிகத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்து, தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் செய்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல், இப்போது கர்நாடக அரசை எதிர்க்க விருப்பமில்லாமல், வாய்மூடிக் கிடக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories