December 5, 2025, 7:36 PM
26.7 C
Chennai

காவிரி விவகாரம்; கர்நாடகத்தை நெருக்கும் மத்திய அரசு: குமாரசாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் திமுக.,!

CauveryManagementAuthority member masood - 2025

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழகமும், புதுச்சேரியும் பிரதிநிதிகளை நியமித்த பின்னரும், கர்நாடகம் இன்னும் மௌனமாக இருந்து, ஆணையப் பணிகளை தாமதப் படுத்தி வருகிறது. இதை அடுத்து, பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. அதே நேரம், கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், பாஜக., தோற்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் காவிரி விவகாரத்தை எழுப்பி நெருக்கடி கொடுத்து தீவிர வன்முறை அரசியலில் ஈடுபட்ட திமுக., உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், இப்போது வாய்மூடி, தங்கள் வேலை முடிந்துவிட்டது போல் மௌனமாகக் கிடக்கின்றன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகார பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

இதை அடுத்து, தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகளின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டனர். இந் நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயரை அறிவிக்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தாமதப் பட்டு வருவதை மத்திய அரசு சுட்டிக் காட்டியது. தற்போது பருவமழைக் காலம் என்பதாலும், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, குறுவை சாகுபடிக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்பதாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாக செயல்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், கர்நாடக அரசு ஆணையப் பணிகளை விரும்பவில்லை. இந்த ஆணையத்தால் சாதகமா பாதகமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு, இன்னமும் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை. இதனால் மேலும் இந்த விவகாரம் சிக்கலாகும் என்பதை உணர்ந்து, கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தை அதன் தற்காலிகத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்து, தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் செய்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல், இப்போது கர்நாடக அரசை எதிர்க்க விருப்பமில்லாமல், வாய்மூடிக் கிடக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories