காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published:

04 May15 pon radha e1527909662278 - 2026

திருவாரூர்: காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஆணையம் செயல்பட முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தன் பிரதிநிதிகளை பரிந்துரைக்காமல் உள்ளது. இதனால் ஆணையத்தின் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது.

திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி கர்நாடகாவில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பச் சொல்ல வேண்டும் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மேலும், சேலம் பசுமை வழி சாலைத்திட்டம் குறித்தும், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் கேட்கப் பட்ட போது,  சென்னை- – சேலம் பசுமை சாலைத்திட்டத்தை வேண்டும் என்றே, பல இயக்கங்கள் எதிர்க்கின்றன என்று கூறிய அவர், தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவர்களை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை – சேலம் பசுமை சாலைத்திட்டம் தமிழகத்திக்கு கிடைத்த வரப்பிரசாதம். திமுக., ஆட்சியில் இதுபோன்ற புதிய திட்டங்கள் ஏதும் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. எனவே இந்தத் திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர் என்று கூறினார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img