மோடியை சுற்றி வளைத்த முதல்வர்கள்; என்ன பேசினார்கள்?

Published:

modi niti ayog - 2026

நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மோடியை சுற்றி நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பாஜக., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகிய பின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்தார். மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பிணரயி விஜயன் உள்ளிட்டோரும் மோடியை சுற்றி நின்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பிய சந்திரபாபு நாயுடு, அதற்கு ஆதரவு தருமாறு மம்தா பானர்ஜி, பினரயி விஜயன், குமாரசாமி உள்ளிட்ட மற்ற மாநில முதலமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img