எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்கள்

subramanian swami4 - 2026

‘ரஜினி எனக்கு நண்பர் இல்லை. அவர் குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிக் கொடுப்பதைப் படிப்பவர். பொதுவாகவே நடிகர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பிப்பவர்கள். சுயமாக சிந்திக்கத் தெரியாது’ என்று பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பேட்டியில், ‘தமிழகத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது. வெளிமாநிலத்திலிருந்து வரும் பாஜக-வினரை வரவேற்று உபசரிக்கும் இடமாகத்தான் தமிழக அலுவலகம் உள்ளது. ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ எந்த ஒரு விஷயத்தையும் தமிழக பாஜக நடத்துவது இல்லை.

கர்நாடக தேர்தலில் 115 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்’ என்றார். மேலும், ரமலான் மாதம் முதல் அமர் யாத்திரை வரை ராணுவம் காஷ்மீரில் தனது யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா கோரிக்கை குறித்துக் கேட்டதற்கு, அங்கு ராணுவ ஆட்சித் தான் வர வேண்டும் என்றார்.

கடந்த நான்கு வருடங்களாக பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லையே என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை உள்ளவர். அவர் பிறரை ஏமாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே பெயிலில் இருக்கிறார். தனது படிப்பிலும் பல பாடங்களில் பெயில் ஆனவர். அவருக்கு என்ன தெரியும்? என்றார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

மேலும் அவர், ‘தமிழக அரசியல்வாதிகள் காவிரித் தண்ணீர் வருவது குறித்து விரும்பாதவர்கள். அவர்கள் தண்ணீரை வணிகம் செய்யும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீர் தேவையில்லை என நினைப்பவர்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினாலே தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். தமிழக அரசியல்வாதிகள் எந்த ஒரு திட்டத்திற்கும் மத்திய அரசை வலியுறுத்திப் பெறுவது கிடையாது. நீட் தேர்வு விஷயங்களில் என்னை யாரும் எதற்கும் தொடர்பு கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகள் பலம் பெறவே உதவுகிறது. பாகிஸ்தானில் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் சென்று பேசியதிலிருந்தே தெரிகிறது. பாகிஸ்தான் உதவியோடு பாஜக-வைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது. கர்நாடகத் தேர்தலில், காங்கிரஸ் சமுதாயப் பிரிப்பு வேலைகளில் ஈடுபடுவதால் மக்கள் காங்கிரஸ் மீது வெறுப்போடு இருக்கின்றனர். பாஜக கர்நாடகாவில் 115 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும்’ என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே? என்ற கேள்விக்கு, இது குறித்து உபி முதல்வரிடம் கேட்டதற்கு, அவர் நடக்கவில்லை என்கிறார். யாராவது வழக்குப் போட்டால் அது குறித்து மேற்கொண்டு செயல்படத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories