இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

vaiko protest - 2026

திருச்சி: காவிரி உரிமை மீட்பு தொடர்பாக, விவசாயிகளின் சார்பில் தண்ணீர் அருந்தாப்போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, தண்ணீர் அருந்திய வைகோ, பின்னர் அது வெந்நீர் என்று விளக்கம் அளித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தண்ணீர் அருந்தா போராட்டத்தின் போது, கட்சிக்காரர்கள் தனக்கு அளித்த ஒரு டம்ளர் தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார் வைகோ. பின்னர், அண்ணே இது தண்ணீர் அருந்தா போராட்டம்ணே என்று அருகில் இருந்த நிர்வாகிகள் அவருக்கு எடுத்துக் கொடுத்தனர்.

அதனால் சற்று நெளிந்த வைகோ, பின்னர் தான் பேசிய போது, இது தண்ணீர் அருந்தாப் போராட்டம்னு ஒரு பயலும் நோட்டீஸ கொண்டாந்து என்கிட்ட காண்பிக்கலே. நான் தண்ணீர் குடிக்கலே… வெந்நீர் குடிச்சேன். அதுக்குப் பிறவுதான், இந்தாங்கண்ணே என்று நோட்டீஸ காட்டினாங்க. அத முன்னாடியே காட்டியிருந்தாங்கன்னா… நான் இந்த வெந்நீரக் கூட குடிச்சிருக்க மாட்டேன்.

பத்திரிகைக்காரங்க, ஊடகங்கள்லாம் இருக்காங்க. அவங்கபாட்டுக்கு பெரிசா… வைகோ தண்ணீர் குடிக்காப் போராட்டத்தின் போது தண்ணீர் குடிச்சார்னு போட்டிறப் போறாங்க… என்றெல்லாம் தானாக முன்வந்து மைக் பிடித்து விளக்கம் அளித்தார் வைகோ.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தா போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டக் களத்தில்தான் இந்தக் கூத்து நடைபெற்றது. போராட்டத்தின் பெயரை கொட்டை எழுத்துகளில் கண்ணில் எல்லா இடத்திலும் படும் வகையில் பேனர்களாக வைத்திருந்தார்கள். எனவே எவர் கண்ணுக்கும் இது படாமல் இருக்காது. ஆனாலும் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி, வக்கீல் வைகோ என்பதை நிரூபித்தார்.

என்ன போராட்டம் ஏது போராட்டம் என்றெல்லாம் கேட்காமல் ஏதாவது மேடை போட்டால் போதும், மைக் கிடைத்தால் போதும்… திட்டித் தீர்ப்பதற்கு மத்திய அரசும் மோடியும் இருக்கிறார்கள் என்ற எல்லா மேடைகளிலும் ஒரே பல்லவியைப் பாடுவதற்கு தயார் செய்து வந்திருக்கும் போது, தண்ணி அருந்தாப் போராட்டம்லாம் வைகோவின் கண்ணில் படப் போகிறதா என்ன?

ஆனாலும் ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்தப் போராட்டத்தில், வைகோ,வுடன் ஜி.கே.வாசன், காதர் மொய்தீன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories