February 22, 2026, 6:48 AM
25.4 C
Chennai

இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

vaiko protest - 2026

திருச்சி: காவிரி உரிமை மீட்பு தொடர்பாக, விவசாயிகளின் சார்பில் தண்ணீர் அருந்தாப்போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, தண்ணீர் அருந்திய வைகோ, பின்னர் அது வெந்நீர் என்று விளக்கம் அளித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தண்ணீர் அருந்தா போராட்டத்தின் போது, கட்சிக்காரர்கள் தனக்கு அளித்த ஒரு டம்ளர் தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார் வைகோ. பின்னர், அண்ணே இது தண்ணீர் அருந்தா போராட்டம்ணே என்று அருகில் இருந்த நிர்வாகிகள் அவருக்கு எடுத்துக் கொடுத்தனர்.

அதனால் சற்று நெளிந்த வைகோ, பின்னர் தான் பேசிய போது, இது தண்ணீர் அருந்தாப் போராட்டம்னு ஒரு பயலும் நோட்டீஸ கொண்டாந்து என்கிட்ட காண்பிக்கலே. நான் தண்ணீர் குடிக்கலே… வெந்நீர் குடிச்சேன். அதுக்குப் பிறவுதான், இந்தாங்கண்ணே என்று நோட்டீஸ காட்டினாங்க. அத முன்னாடியே காட்டியிருந்தாங்கன்னா… நான் இந்த வெந்நீரக் கூட குடிச்சிருக்க மாட்டேன்.

பத்திரிகைக்காரங்க, ஊடகங்கள்லாம் இருக்காங்க. அவங்கபாட்டுக்கு பெரிசா… வைகோ தண்ணீர் குடிக்காப் போராட்டத்தின் போது தண்ணீர் குடிச்சார்னு போட்டிறப் போறாங்க… என்றெல்லாம் தானாக முன்வந்து மைக் பிடித்து விளக்கம் அளித்தார் வைகோ.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தா போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டக் களத்தில்தான் இந்தக் கூத்து நடைபெற்றது. போராட்டத்தின் பெயரை கொட்டை எழுத்துகளில் கண்ணில் எல்லா இடத்திலும் படும் வகையில் பேனர்களாக வைத்திருந்தார்கள். எனவே எவர் கண்ணுக்கும் இது படாமல் இருக்காது. ஆனாலும் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி, வக்கீல் வைகோ என்பதை நிரூபித்தார்.

என்ன போராட்டம் ஏது போராட்டம் என்றெல்லாம் கேட்காமல் ஏதாவது மேடை போட்டால் போதும், மைக் கிடைத்தால் போதும்… திட்டித் தீர்ப்பதற்கு மத்திய அரசும் மோடியும் இருக்கிறார்கள் என்ற எல்லா மேடைகளிலும் ஒரே பல்லவியைப் பாடுவதற்கு தயார் செய்து வந்திருக்கும் போது, தண்ணி அருந்தாப் போராட்டம்லாம் வைகோவின் கண்ணில் படப் போகிறதா என்ன?

ஆனாலும் ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!

இந்தப் போராட்டத்தில், வைகோ,வுடன் ஜி.கே.வாசன், காதர் மொய்தீன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories