இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

vaiko protest - 2026

திருச்சி: காவிரி உரிமை மீட்பு தொடர்பாக, விவசாயிகளின் சார்பில் தண்ணீர் அருந்தாப்போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, தண்ணீர் அருந்திய வைகோ, பின்னர் அது வெந்நீர் என்று விளக்கம் அளித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தண்ணீர் அருந்தா போராட்டத்தின் போது, கட்சிக்காரர்கள் தனக்கு அளித்த ஒரு டம்ளர் தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார் வைகோ. பின்னர், அண்ணே இது தண்ணீர் அருந்தா போராட்டம்ணே என்று அருகில் இருந்த நிர்வாகிகள் அவருக்கு எடுத்துக் கொடுத்தனர்.

அதனால் சற்று நெளிந்த வைகோ, பின்னர் தான் பேசிய போது, இது தண்ணீர் அருந்தாப் போராட்டம்னு ஒரு பயலும் நோட்டீஸ கொண்டாந்து என்கிட்ட காண்பிக்கலே. நான் தண்ணீர் குடிக்கலே… வெந்நீர் குடிச்சேன். அதுக்குப் பிறவுதான், இந்தாங்கண்ணே என்று நோட்டீஸ காட்டினாங்க. அத முன்னாடியே காட்டியிருந்தாங்கன்னா… நான் இந்த வெந்நீரக் கூட குடிச்சிருக்க மாட்டேன்.

பத்திரிகைக்காரங்க, ஊடகங்கள்லாம் இருக்காங்க. அவங்கபாட்டுக்கு பெரிசா… வைகோ தண்ணீர் குடிக்காப் போராட்டத்தின் போது தண்ணீர் குடிச்சார்னு போட்டிறப் போறாங்க… என்றெல்லாம் தானாக முன்வந்து மைக் பிடித்து விளக்கம் அளித்தார் வைகோ.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள தண்ணீர் அருந்தா போராட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போராட்டக் களத்தில்தான் இந்தக் கூத்து நடைபெற்றது. போராட்டத்தின் பெயரை கொட்டை எழுத்துகளில் கண்ணில் எல்லா இடத்திலும் படும் வகையில் பேனர்களாக வைத்திருந்தார்கள். எனவே எவர் கண்ணுக்கும் இது படாமல் இருக்காது. ஆனாலும் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி, வக்கீல் வைகோ என்பதை நிரூபித்தார்.

என்ன போராட்டம் ஏது போராட்டம் என்றெல்லாம் கேட்காமல் ஏதாவது மேடை போட்டால் போதும், மைக் கிடைத்தால் போதும்… திட்டித் தீர்ப்பதற்கு மத்திய அரசும் மோடியும் இருக்கிறார்கள் என்ற எல்லா மேடைகளிலும் ஒரே பல்லவியைப் பாடுவதற்கு தயார் செய்து வந்திருக்கும் போது, தண்ணி அருந்தாப் போராட்டம்லாம் வைகோவின் கண்ணில் படப் போகிறதா என்ன?

ஆனாலும் ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!

இந்தப் போராட்டத்தில், வைகோ,வுடன் ஜி.கே.வாசன், காதர் மொய்தீன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories