மதுரை காமராஜ் பல்கலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Published:

12 May15 SC - 2026மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து, தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, செல்லத்துரை தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனு, நாளை விசாரிக்கப்படவுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மதுரை மாவட்டச் செயலர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு, பேராசிரியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இல்லை. அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுபோல், ‘டிராபிக்’ ராமசாமியும் மனு செய்தார்.இந்த மனுக்களை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்த உத்தரவை, ரத்து செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர், மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்துல் நசீர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img