December 5, 2025, 1:32 PM
26.9 C
Chennai

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு: டிவிட்டர் மேதாவிகள் இந்தியாவுக்குக் கொடுத்த ‘கௌரவ’ முதலிடம்!

girl attack image - 2025

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது.

உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகக் கூறுமாறு, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘மீடூ’ என்ற ஹேஷ்டேக் போட்டு, அதில் தகவல்களைப் பகிருமாறு கோரப்பட்டது.

அமெரிக்காவில் அண்மையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகார்களைக் கூறினர். இதையடுத்து, ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ஒரு பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்படி, அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மீ டூ (Mee Too) என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

‘மீ டூ’ என்ற தலைப்பின் கீழ் இந்த பிரச்சாரம் வைரலாக பரவியது. இந்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் கொண்ட குழு கருத்துக் கணிப்பு நடத்தியது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளைச் சேர்ந்த 550 வல்லுநர்களிடம் ஆய்வு நடத்தியதாம். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும், சிரியா மூன்றாமிடத்திலும் உள்ளன. சோமாலியா, சௌதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 6 ஆவது இடத்திலும், அமெரிக்கா 10 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்த அளவில், நிர்பயா விவகாரத்திற்குப் பிறகும், பெண்கள் பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லையாம்.

இந்தியாவில் 2007 – 2016க்கு இடைப்பட்ட பத்தாண்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் தெரிவிக்கும் இந்த ஆய்வு முடிவில், குடும்ப வன்முறை மற்றும் உளவியல் சிதைவு போன்ற பாதிப்புகளே இந்தியாவில் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories