ஹிந்து உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேச்சு: பிக்பாஸ் நடிகர் ஊருக்குள் நுழைய 6 மாதம் தடை!

Mahesh Kathi 0 0 - 2026

திங்கள் கிழமை தெலங்கானா போலீஸார், நடிகரும் விமர்சகருமான மகேஷ் கதியை ஹைதராபாத்துக்குள் இன்னும் 6 மாத காலத்துக்கு நுழைவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தெலங்கானா சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1930ன் கீழ் மகேஷ் கதிக்கு இந்த விதமான தண்டனை கொடுக்கப் பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.

ஹிந்து கடவுள்களை இழிவாகப் பேசியதற்காக, தெலுங்கு திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான, மகேஷ் கதிக்கு 6 மாதங்களுக்கு ஹைதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வரும் மகேஷ் கதி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

தெலுங்கு ‘டிவி’ சேனலில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அடிக்கடி டிவி விவாதங்களில் பங்கேற்கும் மகேஷ் கதி, சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளைக் கூறி, பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளாவார். அண்மையில் தெலுங்கு ‘டிவி’ சேனலில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற மகேஷ் கதி, அந்த நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களான ராமர், சீதை குறித்து தரக் குறைவான விமர்சனங்களைக் கூறினார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதனால் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரது கருத்துகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக பல இடங்களில் போலீஸாரிடம் புகார்களும் கொடுக்கப் பட்டன. இதை அடுத்து போலீஸார் மகேஷுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவரை தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஆறு மாத காலத்துக்கு வெளியேற்ற முடிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலத்தில் உள்ள மகேஷின் சொந்த ஊரான சித்துாரில் இறக்கிவிட்டு வந்தனர். மகேஷ் கதி ஆறு மாதத்துக்கு தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. தெலுங்கானா மாநில அரசுக்கு ஹிந்துக்கள், ஆஸ்திகம் மீது இருக்கும் மதிப்பு மிகவும் போற்றப்படவேண்டியது. ஆனால் இங்குள்ள தமிழக அரசு ஹிந்துக்களையும், ஆஸ்திகர்களையும் ஏன் பாதுகாக்க மறுக்கிறது ?

  2. சீமானை உடனடியாக தெலங்கானாவிற்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories