ஹிந்து உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேச்சு: பிக்பாஸ் நடிகர் ஊருக்குள் நுழைய 6 மாதம் தடை!

Mahesh Kathi 0 0 - 2026

திங்கள் கிழமை தெலங்கானா போலீஸார், நடிகரும் விமர்சகருமான மகேஷ் கதியை ஹைதராபாத்துக்குள் இன்னும் 6 மாத காலத்துக்கு நுழைவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தெலங்கானா சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1930ன் கீழ் மகேஷ் கதிக்கு இந்த விதமான தண்டனை கொடுக்கப் பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.

ஹிந்து கடவுள்களை இழிவாகப் பேசியதற்காக, தெலுங்கு திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான, மகேஷ் கதிக்கு 6 மாதங்களுக்கு ஹைதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வரும் மகேஷ் கதி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

தெலுங்கு ‘டிவி’ சேனலில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அடிக்கடி டிவி விவாதங்களில் பங்கேற்கும் மகேஷ் கதி, சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளைக் கூறி, பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளாவார். அண்மையில் தெலுங்கு ‘டிவி’ சேனலில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற மகேஷ் கதி, அந்த நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களான ராமர், சீதை குறித்து தரக் குறைவான விமர்சனங்களைக் கூறினார்.

இதனால் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரது கருத்துகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக பல இடங்களில் போலீஸாரிடம் புகார்களும் கொடுக்கப் பட்டன. இதை அடுத்து போலீஸார் மகேஷுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவரை தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஆறு மாத காலத்துக்கு வெளியேற்ற முடிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலத்தில் உள்ள மகேஷின் சொந்த ஊரான சித்துாரில் இறக்கிவிட்டு வந்தனர். மகேஷ் கதி ஆறு மாதத்துக்கு தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. தெலுங்கானா மாநில அரசுக்கு ஹிந்துக்கள், ஆஸ்திகம் மீது இருக்கும் மதிப்பு மிகவும் போற்றப்படவேண்டியது. ஆனால் இங்குள்ள தமிழக அரசு ஹிந்துக்களையும், ஆஸ்திகர்களையும் ஏன் பாதுகாக்க மறுக்கிறது ?

  2. சீமானை உடனடியாக தெலங்கானாவிற்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories