புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும், புதிய விதிமுறைகளை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. பல மாநிலங்களில் அரசுக்கு சாதகமாக நடக்காத அல்லது நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதோடு சஸ்பெண்ட் அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வட மாநிலங்களில் அசோக் கேம்கா, துர்கா சக்தி நெய்பால், குல்தீப் நாராயண் போன்ற மூத்த அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம், சஸ்பெண்ட் போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதை அடுத்து, இந்தப் பிரச்னையை மத்திய அரசுக்கு மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அரசியல் நோக்கத்துக்காக அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுக்கும் விதமாக, ஒரு அதிகாரியை ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் செய்ய முடியாது; சஸ்பெண்ட் செய்த 48 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமானால், உரிய காரணம் அளிக்க வேண்டும்; மத்திய சிவில் சர்வீசஸ் வாரியம் அல்லது மத்திய ஆய்வுக் குழு இதை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். இல்லாவிடில் சஸ்பெண்ட் ரத்தாகிவிடும். ஓர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதை உறுதி செய்ய, 30 நாளுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்து, அந்த விதிமுறைகள் அனைந்திந்திய சேவைகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) திருத்தச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரியை மாநில அரசுகள் பழிவாங்குவதோ, அல்லது வீணான நடவடிக்கை எடுப்பதோ தடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

