புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும், புதிய விதிமுறைகளை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. பல மாநிலங்களில் அரசுக்கு சாதகமாக நடக்காத அல்லது நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதோடு சஸ்பெண்ட் அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வட மாநிலங்களில் அசோக் கேம்கா, துர்கா சக்தி நெய்பால், குல்தீப் நாராயண் போன்ற மூத்த அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம், சஸ்பெண்ட் போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதை அடுத்து, இந்தப் பிரச்னையை மத்திய அரசுக்கு மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அரசியல் நோக்கத்துக்காக அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுக்கும் விதமாக, ஒரு அதிகாரியை ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் செய்ய முடியாது; சஸ்பெண்ட் செய்த 48 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமானால், உரிய காரணம் அளிக்க வேண்டும்; மத்திய சிவில் சர்வீசஸ் வாரியம் அல்லது மத்திய ஆய்வுக் குழு இதை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். இல்லாவிடில் சஸ்பெண்ட் ரத்தாகிவிடும். ஓர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதை உறுதி செய்ய, 30 நாளுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்து, அந்த விதிமுறைகள் அனைந்திந்திய சேவைகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) திருத்தச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரியை மாநில அரசுகள் பழிவாங்குவதோ, அல்லது வீணான நடவடிக்கை எடுப்பதோ தடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.
ஆன்மிகச் செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

