நெட் நியூட்ராலிடி-க்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!

net neutrality - 2026

நெட் நியூட்ராலிடி எனப்படும் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த இணைய சமநிலைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காகூட இணைய சமநிலைப் பயன்பாட்டில் பாதுகாப்பு நிலையை மேற்கொள்ள தட்டுத் தடுமாறி, மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு படி நிலைகளில் இதனை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் உறுதி வாய்ந்த இணைய சமநிலைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நெட் நியூட்ரலிட்டி என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணைய சேவை என்பதுதான்! அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது.

சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக் கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித் தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது. அதன்படி இணையத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கான சம உரிமைக் கொள்கை உருவாக்கப்பட்டது.

இதற்காக டிராய் அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறுகையில், ‘இணையதள சேவைகளை முடக்குதல், அதிவேக இணையப் பயன்பாடு அளித்தல் ஆகியவற்றில் பயனர்களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டி வருவதற்கு தடை விதிக்க வகை செய்யும் விதிமுறைகளை டிராய் பரிந்துரை செய்தது. மேலும் புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.’’ என்று கூறினார்.

நெட் நியூட்ராலிடி எனப்படும் இணைய சமநிலைக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதால் இனி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கோர இயலாது.

#NetNeutrality

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories