February 21, 2026, 3:43 PM
30.4 C
Chennai

நெட் நியூட்ராலிடி-க்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!

net neutrality - 2026

நெட் நியூட்ராலிடி எனப்படும் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த இணைய சமநிலைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காகூட இணைய சமநிலைப் பயன்பாட்டில் பாதுகாப்பு நிலையை மேற்கொள்ள தட்டுத் தடுமாறி, மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு படி நிலைகளில் இதனை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் உறுதி வாய்ந்த இணைய சமநிலைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நெட் நியூட்ரலிட்டி என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணைய சேவை என்பதுதான்! அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது.

சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக் கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித் தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது. அதன்படி இணையத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கான சம உரிமைக் கொள்கை உருவாக்கப்பட்டது.

இதற்காக டிராய் அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறுகையில், ‘இணையதள சேவைகளை முடக்குதல், அதிவேக இணையப் பயன்பாடு அளித்தல் ஆகியவற்றில் பயனர்களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டி வருவதற்கு தடை விதிக்க வகை செய்யும் விதிமுறைகளை டிராய் பரிந்துரை செய்தது. மேலும் புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.’’ என்று கூறினார்.

நெட் நியூட்ராலிடி எனப்படும் இணைய சமநிலைக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதால் இனி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கோர இயலாது.

#NetNeutrality

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories