’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

Published:

nellai medical seat poor boy - 2026

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.

திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சிவசக்தி, வீடுகளில் பணி செய்து வருகிறார். இவர்களது மகன் சுதாகர் (20) நெல்லை சாப்டர் பள்ளியில் 2016-ல் பிளஸ் டூ பயின்றார். 1046 மதிப்பெண் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், 161 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை.

மீண்டும் தனியார் நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்றவர் 2018ல் நடந்த நீட் தேர்வில் 303 மதிப்பெண் பெற்றார். தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

தமிழ் மீடியத்தில் பள்ளியில் பயின்ற சுதாகர், ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். துப்புரவு தொழிலாளியின் மகன் சுதாகர், குடும்பம் வறுமையான சூழலிலும் இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு மருத்துவ சீட் பிடித்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா, சுதாகரையும் அவரது பெற்றோரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி ஊக்குவித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img