திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

aagktv2o tirupati - 2026
திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் இருவரும் திருப்பதி கோயில் உண்டியல் மற்றும் தேவஸ்தானத்தால் நடத்தப்படும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக மொத்தம் ரூ.13.5 கோடி அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருந்து கம்பெனியான ஆர்எக்ஸ் அட்வான்ஸ் சிஇஓ., ஈகா ரவி ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜேசிஜி டெக்னாலஜீஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ., குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு காணிக்கையாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்துள்ளார். அப்போது ஆந்திராவின் தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி உடன் இருந்துள்ளார். இதனை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி தெரிவித்தார்.

திருப்பதியில் இயங்கிவரும் மக்கள் நல அறக் கட்டளைகள், மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் மேற்கோள் படி, 2018-19 ஆண்டில் 2,894 கோடி ரூபாய் வருவாயும், உண்டியலில் இருந்து ரூ.1,156 கோடியும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories