திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

Published:

aagktv2o tirupati - 2026
திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் இருவரும் திருப்பதி கோயில் உண்டியல் மற்றும் தேவஸ்தானத்தால் நடத்தப்படும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக மொத்தம் ரூ.13.5 கோடி அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருந்து கம்பெனியான ஆர்எக்ஸ் அட்வான்ஸ் சிஇஓ., ஈகா ரவி ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜேசிஜி டெக்னாலஜீஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ., குதிகொண்டா ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு காணிக்கையாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்துள்ளார். அப்போது ஆந்திராவின் தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி உடன் இருந்துள்ளார். இதனை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி தெரிவித்தார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

திருப்பதியில் இயங்கிவரும் மக்கள் நல அறக் கட்டளைகள், மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் மேற்கோள் படி, 2018-19 ஆண்டில் 2,894 கோடி ரூபாய் வருவாயும், உண்டியலில் இருந்து ரூ.1,156 கோடியும் எதிர்பார்க்கப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img