கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

11 July31 ragul gandi - 2026கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.

தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே டாக்டர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் உடல் நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காவேரி ஆஸ்பத்திரிக்கு கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி இருந்து வருகிறார்.

தொடர்ந்து 4-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நிலை பற்றிய தகவலை அறிந்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகத்திலும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. இதனால், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருணாநிதியின் உடல் நிலை பற்றி நேற்று மாலை மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படாத நிலையில், இன்று மருத்துவ அறிக்கை வெளியிடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர், தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் வந்து உடல் நலம் பற்றி கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை தர உள்ளார். இன்று மாலை 4 மணியளவில், காவேரி மருத்துவமனைக்கு வருகை தரும் ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ராகுல் காந்தி வருகை தர உள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories