மரண விளையாட்டு கீகீ சேலஞ்ச்: வைரலாகும் வீடியோக்களால் உயிர் போகும் பரிதாபம்!

Published:

kiki1 horz - 2026

இப்போது உற்சாகம் என்ற பெயரில் வந்துள்ளது ஒரு மரண விளையாட்டு. ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி, காரை ஓடவிட்டு, அதனுள்ளிருக்கும் ஒருவரால் செல்லில் வீடியோ எடுத்து போடுவது..

ஓடும் காரில் இருந்து இறங்கி ஆட வைக்கும் இந்த ‘கிகி சேலஞ்ச்’ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரது கண்டனங்களையும் எதிர்ப்பையும், உலக அளவில் பல நாடுகளின் போலீஸாரால் கடும் எச்சரிக்கைகளையும் பெற்று வருகிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும் தாங்களும் அது போல் முயன்று உயிரை இழந்துள்ளனர். அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் போடப் பட்டு வருகின்றன. இவற்றால் விபத்துகள் ஏற்படுவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், சிலர் காரை கடத்திக் கொண்டு போவதும் கூட நடக்கிறது…

வெளிநாடுகளில் பரவிய இந்த விஷ விளையாட்டு, இப்போது தலைநகர் தில்லி, மும்பை,  ஹைதராபாத் என இந்திய நகரங்களிலும் பரவியது. இதை அடுத்து, ஹைதராபாத் போலீஸார், கீகீ சேலஞ்ச் என்ற பெயரில் யாராவது காரை விட்டு இறங்கி ஆட்டம் போட்டால், கம்பி எண்ண வேண்டி வரும் என எச்சரிக்கை விட்டனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

police order kiki challenge - 2026

ஆனாலும் நடிக நடிகையர்களும் இந்த சேலஞ்சுக்கு போட்டி போடுவதால், இது எங்கு போய் முடியுமோ என பலருக்கும் இப்போது அடிவயிற்றில் கலக்கம் கொடுத்துள்ளது.

என்னடா உலகம் இது…!

#ReginaCassandra #KikiChallenge #kikichallange #kiki #InMyFeelingsChallenge #InMyFeelings #InMyFeelingsChallenege #drake #DrakeChallenge #SCORPION

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img