கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’! தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

Writer Hareesh Meesha collage - 2026

மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் பலரும்.

இந்த நாவல், மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்தது. தொடர்ந்து இதனை நாவலாக வெளியிடும் முயற்சியில் அது ஈடுபட்டது. ஆனால், ஹிந்துப் பெண்களின் எதிர்ப்பால் மாத்ருபூமி இதழ் இந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும், டிசி புக்ஸ் இந்த நாவலை அனைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் வெளியிட்டுள்ளது. இது கேரளத்தில் உள்ள அனைத்து புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனிடையே, இந்த நாவலுக்கு எதிராக ஒரு ரிட் பெட்டிஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்பதாகக் கூறியுள்ளது. (SC Agrees To Hear Plea Against Malayalam Novel “Meesha” Alleging Insult To Hindu Women [Read Petition]…)

மாத்ருபூமி இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாயர் சமுதாயத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெண்கள் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை எடுத்து வைத்து எரித்து புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிகரமான ஒரு முடிவெடுத்தது நாயர் சமூகம். இந்த சங்கத்தின் தில்லி மத்திய கமிட்டி கூடி, 23 மண்டலங்களிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் உடனடியாக மாத்ருபூமி இதழ்களை வாங்குவதை நிறுத்துவதென்றும், மாத்ரு பூமி செய்தித் தாளை புறக்கணிப்பதென்றும் தீர்மானித்தனர். இதனை ஒரு சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைத்தனர்.

kerala nair society - 2026

இதை அடுத்து, மாத்ருபூமி இதழ்களுக்கும் செய்தித் தாளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹிந்துப் பெண்கள் பலரும் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை வீட்டின் வாசலில் வைத்தபடி, அதனை தீயிட்டுக் கொளுத்தி வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img