December 5, 2025, 7:07 PM
26.7 C
Chennai

கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’! தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்!

Writer Hareesh Meesha collage - 2025

மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் பலரும்.

இந்த நாவல், மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்தது. தொடர்ந்து இதனை நாவலாக வெளியிடும் முயற்சியில் அது ஈடுபட்டது. ஆனால், ஹிந்துப் பெண்களின் எதிர்ப்பால் மாத்ருபூமி இதழ் இந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும், டிசி புக்ஸ் இந்த நாவலை அனைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் வெளியிட்டுள்ளது. இது கேரளத்தில் உள்ள அனைத்து புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனிடையே, இந்த நாவலுக்கு எதிராக ஒரு ரிட் பெட்டிஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்பதாகக் கூறியுள்ளது. (SC Agrees To Hear Plea Against Malayalam Novel “Meesha” Alleging Insult To Hindu Women [Read Petition]…)

மாத்ருபூமி இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாயர் சமுதாயத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெண்கள் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை எடுத்து வைத்து எரித்து புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிகரமான ஒரு முடிவெடுத்தது நாயர் சமூகம். இந்த சங்கத்தின் தில்லி மத்திய கமிட்டி கூடி, 23 மண்டலங்களிலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் உடனடியாக மாத்ருபூமி இதழ்களை வாங்குவதை நிறுத்துவதென்றும், மாத்ரு பூமி செய்தித் தாளை புறக்கணிப்பதென்றும் தீர்மானித்தனர். இதனை ஒரு சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைத்தனர்.

kerala nair society - 2025

இதை அடுத்து, மாத்ருபூமி இதழ்களுக்கும் செய்தித் தாளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹிந்துப் பெண்கள் பலரும் தங்களது கைகளில் மாத்ருபூமி இதழ்களை வீட்டின் வாசலில் வைத்தபடி, அதனை தீயிட்டுக் கொளுத்தி வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories