கேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு!

modi in kerala meeting - 2026

கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கேரளாவில் காசர்கோடு தவிர  மற்ற மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

kochi modi - 2026

இந்நிலையில்  கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள சேதத்தை  பார்வையிட பிரதமர் மோடி கேரளம் வந்தார். காலை 8 மணி அளவில் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பிணரயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கொச்சி கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமருடன் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்றார்.

kerala flood situation2 - 2026

கொச்சியில் முதலமைச்சர் பிணரயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது.

இதனிடையே இந்த கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த மோடி, கேரள மக்களின் ஒற்றுமைக்கு தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார்.

வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பின்னர் கேரளா மாநிலத்திற்கு முதல் கட்டமாக, உடனடியாக ரூ.500 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

kerala flood situation1 - 2026

இந்தத் தொகை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories