கேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு!

Published:

modi in kerala meeting - 2026

கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கேரளாவில் காசர்கோடு தவிர  மற்ற மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

kochi modi - 2026

இந்நிலையில்  கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள சேதத்தை  பார்வையிட பிரதமர் மோடி கேரளம் வந்தார். காலை 8 மணி அளவில் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பிணரயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கொச்சி கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமருடன் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்றார்.

kerala flood situation2 - 2026

கொச்சியில் முதலமைச்சர் பிணரயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இதனிடையே இந்த கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த மோடி, கேரள மக்களின் ஒற்றுமைக்கு தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார்.

வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பின்னர் கேரளா மாநிலத்திற்கு முதல் கட்டமாக, உடனடியாக ரூ.500 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

kerala flood situation1 - 2026

இந்தத் தொகை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img