கேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு!

modi in kerala meeting - 2026

கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கேரளாவில் காசர்கோடு தவிர  மற்ற மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

kochi modi - 2026

இந்நிலையில்  கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள சேதத்தை  பார்வையிட பிரதமர் மோடி கேரளம் வந்தார். காலை 8 மணி அளவில் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பிணரயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கொச்சி கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமருடன் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்றார்.

kerala flood situation2 - 2026

கொச்சியில் முதலமைச்சர் பிணரயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இதனிடையே இந்த கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த மோடி, கேரள மக்களின் ஒற்றுமைக்கு தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார்.

வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பின்னர் கேரளா மாநிலத்திற்கு முதல் கட்டமாக, உடனடியாக ரூ.500 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

kerala flood situation1 - 2026

இந்தத் தொகை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories