December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

இந்திராவும் ராஜீவ் காந்தியும் மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார்கள்: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல்

harsimrat kaur badal - 2025

புதுதில்லி: இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணம் அடைந்தார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டை அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலை குறித்து பேசினார். அதில், எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மிகவும் வலி நிறைந்ததுதான். ஆனால் அதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவமே, பின்னர் கலவரமாக மாறியது என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு சிரோமணி அகாலிதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாதல் செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில் கூறுயபோது, ராகுலின் இந்தக் கருத்து காயத்தில் உப்பைத் தடவுவதை போல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சீக்கிய படுகொலை நடக்கவும் இல்லை, சீக்கியர்கள் யாரும் உயிரிழக்கவுமில்லை என்றுகூட ராகுல் சொல்வார். இதன் மூலம் சீக்கிய இனப் படுகொலையில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் ராகுல்.

ராகுலின் பாட்டி சீக்கியர்களை அழித்தார். அவர் தந்தையோ பஞ்சாப்பை துண்டாக்கினார். ராகுலின் தந்தை படைகளை அனுப்பி ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றார். அவர்கள் பஞ்சாப்புக்கு அளித்ததும் இந்த இனப் படுகொலையைத் தான்! ராகுல் காந்தி குழந்தைத் தனமான அரசியல் மற்றும் முதிர்ச்சியின்மையுடன் நாட்டுக்கு பொய்களை அவிழ்த்து விடுகிறார்.

ராகுலின் மூளையில் என் மூளையை வைத்துச் சொல்கிறேன். அவரது கூற்றுப் படி சீக்கிய படுகொலை நடக்கவே இல்லை என்றால், எனது கூற்றுப்படி அவரது தந்தையும், பாட்டியும் படுகொலை செய்யப்படவே இல்லை. அவர்கள் இருவரும் வெகு சாதாரணமாக மாரடைப்பினாலேயே உயிரிழந்தனர்… என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், சீக்கிய படுகொலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசிய வீடியோ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சீக்கிய இனப் படுகொலைக்காக மன்னிப்பு கோரிய வீடியோக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்சிம்ரத் கௌர் பாதல்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories