இந்திராவும் ராஜீவ் காந்தியும் மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார்கள்: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல்

harsimrat kaur badal - 2026

புதுதில்லி: இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணம் அடைந்தார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டை அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலை குறித்து பேசினார். அதில், எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மிகவும் வலி நிறைந்ததுதான். ஆனால் அதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவமே, பின்னர் கலவரமாக மாறியது என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு சிரோமணி அகாலிதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாதல் செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில் கூறுயபோது, ராகுலின் இந்தக் கருத்து காயத்தில் உப்பைத் தடவுவதை போல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சீக்கிய படுகொலை நடக்கவும் இல்லை, சீக்கியர்கள் யாரும் உயிரிழக்கவுமில்லை என்றுகூட ராகுல் சொல்வார். இதன் மூலம் சீக்கிய இனப் படுகொலையில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் ராகுல்.

ராகுலின் பாட்டி சீக்கியர்களை அழித்தார். அவர் தந்தையோ பஞ்சாப்பை துண்டாக்கினார். ராகுலின் தந்தை படைகளை அனுப்பி ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றார். அவர்கள் பஞ்சாப்புக்கு அளித்ததும் இந்த இனப் படுகொலையைத் தான்! ராகுல் காந்தி குழந்தைத் தனமான அரசியல் மற்றும் முதிர்ச்சியின்மையுடன் நாட்டுக்கு பொய்களை அவிழ்த்து விடுகிறார்.

ராகுலின் மூளையில் என் மூளையை வைத்துச் சொல்கிறேன். அவரது கூற்றுப் படி சீக்கிய படுகொலை நடக்கவே இல்லை என்றால், எனது கூற்றுப்படி அவரது தந்தையும், பாட்டியும் படுகொலை செய்யப்படவே இல்லை. அவர்கள் இருவரும் வெகு சாதாரணமாக மாரடைப்பினாலேயே உயிரிழந்தனர்… என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், சீக்கிய படுகொலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசிய வீடியோ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சீக்கிய இனப் படுகொலைக்காக மன்னிப்பு கோரிய வீடியோக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்சிம்ரத் கௌர் பாதல்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories