கோலி 6000…! கொண்டாடிய ஹோட்டல்! சர்ப்ரைஸில் சரிந்த விராட்…!

Published:

virat 6000 - 2026

இங்கிலாந்து மண்ணில் தனக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று விராட் கோலி நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவும் இங்கிலாந்தில் இந்திய அணியின் கேப்டனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?! நெகிழ்ந்து தான் போனார் விராட் கோலி! அந்த நெகிழ்ச்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் போட்டு பூரிப்படைந்துபோனார்!

 

குறைந்த போடிகளில் 6000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் விராட் கோலி. அதைக் கொண்டாடும் வகையில் சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.  அதுதான் இந்த 6000 என எழுதப் பட்ட வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணி, தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்னும், இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்னும் எடுத்தன.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அந்த முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 46 ரன் எடுத்த போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை எட்ட அவருக்கு 119 இன்னிங்ஸ்கள் தேவைப் பட்டுள்ளன. இப்படி குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ரன் எடுத்தவர் பட்டியலில் 117 இன்னிங்ஸில் இந்தியாவின் சுனில் காவஸ்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு இரு இன்னிங்க்ஸ் குறைவாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இப்படி கோலியின் சாதனையைப் பாராட்ட நினைத்த சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் நிர்வாகத்தினர்,  உணவு தட்டில் 6000 என எழுதி செர்ரி பழங்கள், இரண்டு கேக்குகள் வைத்து அலங்கரித்து கோலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதை  போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கோலி!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img