வாராணசியில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!

01 09 May Narendra Modi - 2026

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை வாராணசியில் கொண்டாடுகிறார். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுடன் தனது நேரத்தை அவர் செலவிடுவார் எனத் தெரிகிறது.

பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமரை வரவேற்பதற்காகவும் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும், புனிதமான காசி நகரம் விழாக் கோலம் பூணுகிறது. பிரதமரின் இரண்டு நாள் காசி நகர் வருகையைப் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம் பம்பரமாகச் சுற்றி வருகிறது.

பிரதமரின் பயணம்

வாராணசி மாவட்டத்தின் காசி வித்யபீட் ப்ளாக்கில் அமைந்துள்ள நரவூர் கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் சந்தித்து உரையாடுவார் மோடி என்று பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஞ்யானேஷ் ஜோஷி தெரிவித்தார்.

மோடி மாணவர்களுடன் நேரத்தை செலவழிப்பார், அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி பற்றிய முக்கியத்துவம் குறித்து பேசுவார் என்றார் ஜோஷி.

நரவூர்க்குப் பிறகு, ஜெயபூர், நாக்பூர் மற்றும் கக்ரஹியா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவழிக்க, டீசல் லோகோமோடி வொர்க்ஸ் (டி.எல்.வெல்) விருந்தினர் இல்லத்திற்கு அவர் செல்கிறார். குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கிறார்.

செப்டம்பர் 18 ம் தேதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பி.ஹெச்.யூ.) அரங்கத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமரின் பிறந்த நாளை பிஜேபி தொண்டர்கள் நாள் முழுவதும் பல கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், மாவட்டத்தில் 68 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. 68 முக்கிய இடங்களும் விளக்குகளுடன் ஒளிரும். பிரதமரின் நலனுக்காக மாவட்டத்தில் 68 கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப் படுகின்றன.

2014 ஆம் ஆண்டில் மோடி முதல் முறையாக வாராணசியில் இருந்துதான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories