சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!

sabarimalai - 2026

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபரிமலை கோயில் தந்திரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பனின் தேவஸ்தானத்துக்கு கோயில் நடைமுறைகளையும் ஆலய நம்பிக்கைகளையும் மீறி, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. தங்கள் மத நடைமுறையில் தலையிடுவதாகவும், மத சுதந்திரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் கூறி, இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு அமைப்புகள் கேரளத்தில் வலியுறுத்தி வருகின்றன. அதனை தேவசம் போர்டே செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், துவக்கத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக கூறியது தேவசம் போர்டு. ஆனால், அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.

இந்நிலையில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்தும், அதற்கான செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்வர் பிணரயி விஜயன் முடிவு செய்து அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் சபரிமலை கோயில் பூசாரிகளான தந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பை அமல்படுத்த நடத்தப் படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தந்திரிகள் நிராகரிக்கப் போவதாகக் கூறப் படுகிறது. இது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories