சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!

sabarimalai - 2026

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபரிமலை கோயில் தந்திரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பனின் தேவஸ்தானத்துக்கு கோயில் நடைமுறைகளையும் ஆலய நம்பிக்கைகளையும் மீறி, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. தங்கள் மத நடைமுறையில் தலையிடுவதாகவும், மத சுதந்திரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் கூறி, இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு அமைப்புகள் கேரளத்தில் வலியுறுத்தி வருகின்றன. அதனை தேவசம் போர்டே செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், துவக்கத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக கூறியது தேவசம் போர்டு. ஆனால், அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்நிலையில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்தும், அதற்கான செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்வர் பிணரயி விஜயன் முடிவு செய்து அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் சபரிமலை கோயில் பூசாரிகளான தந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பை அமல்படுத்த நடத்தப் படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தந்திரிகள் நிராகரிக்கப் போவதாகக் கூறப் படுகிறது. இது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories