சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!

sabarimalai - 2026

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபரிமலை கோயில் தந்திரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பனின் தேவஸ்தானத்துக்கு கோயில் நடைமுறைகளையும் ஆலய நம்பிக்கைகளையும் மீறி, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. தங்கள் மத நடைமுறையில் தலையிடுவதாகவும், மத சுதந்திரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் கூறி, இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு அமைப்புகள் கேரளத்தில் வலியுறுத்தி வருகின்றன. அதனை தேவசம் போர்டே செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், துவக்கத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக கூறியது தேவசம் போர்டு. ஆனால், அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.

இந்நிலையில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்தும், அதற்கான செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்வர் பிணரயி விஜயன் முடிவு செய்து அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் சபரிமலை கோயில் பூசாரிகளான தந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பை அமல்படுத்த நடத்தப் படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தந்திரிகள் நிராகரிக்கப் போவதாகக் கூறப் படுகிறது. இது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories