கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை இல்லை: அதிகாரி விளக்கம்

Published:

புது தில்லி:
தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று காலை சி.பி.ஐ திடீர் என சோதனை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது முதல்வர் அலுவலகத்தில் சோதனையிடவில்லை. தில்லி தலைமை செயலகத்தின் மூன்றாம் மாடியில் உள்ள முதல்வரின் தலைமைச் செயலர் ராஜேந்தர் குமாரின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலேயே சிபிஐ சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்தர் குமார், பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிபிஐ விளக்கத்தை ஏற்க மறுத்து, கேஜ்ரிவால் இதுகுறித்து கூறும் போது சி.பி.ஐ பொய் சொல்லுகிறது. எனது அலுவலகத்தில்தான் சிபிஐ சோதனை நடத்துகிறது. சில கோப்புகளை எடுத்து பார்த்துள்ளனர். என்னிடம் எந்த கோப்பு வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே எடுத்து கொடுத்திருப்பேன் சி.பி.ஐ மூலம் பிரதமர் மோடி, தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார். இது அவருடைய கோழைத்தனத்தை காட்டுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img