ம.பி.யில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 15 பேர் பலி

Published:

இடார்சி:

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஹோஷானாபாத் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து, பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர்.

இன்று காலை அந்த தனியார் பஸ் இந்தூரில் இருந்து பராசியாவுக்குச் சென்றது என்றும், அப்போது இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்பட்டது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை மோசமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img