சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு – கேரள ஐஜி ஸ்ரீஜித்

05 Oct19 dhin sabari malia - 2026

சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம்பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் ஏராளமான பக்தர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், ஐயப்ப பக்தர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் கவிதா சக்கல், சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் கோவிலின் அருகே நடைப்பந்தல் என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். இந்நிலையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஐயப்ப பக்தர்களும் கோவிலைச் சூழ்ந்துகொண்டு இளம்பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஐயப்பன் கோவிலுக்கு உரிமையுள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், பெண்களை உள்ளே நுழைய முயன்றால் கோவிலைப் பூட்டும்படி பூசாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வழிபாடு நடத்த வந்துள்ள பெண்களைப் பக்தர்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக ஐஜி சிறீஜித் தலைமையில் காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் முற்றுகையையும் தாண்டி காவல்துறையினர் பாதுகாப்புடன் பெண்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பக்தர்களும் பூசாரிகளும் பதினெட்டுப் படிகளின் கீழ்ப் பகுதியில் அமர்ந்து ஐயப்பன் பாடல்களைப் பாடிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories