புது தில்லி:
நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், 1.25 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில்,ஏ.டி.எம்.,கள் மற்றும் குறு ஏ.டி.எம்.,கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், தொலை துார பகுதிகளில் வசிக்கும் மக்கள், எளிதில் பணம் எடுக்க முடியும். பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 38 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றிருந்ததால், 60 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.