சபரிமலை குறித்த மறு சீராய்வு மனுக்கள் குறித்து நவ.13 ஆம் தேதி விசாரணை!

sabarimalai - 2026

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏற்பட்ட பதற்றத்தால், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுக்கள் மீது நவ.13ம் தேதி விசாரணை நடத்தப் படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.

சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை 5 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

ஐப்பசி மாதப் பிறப்புக்காக, நடை திறக்கப்பட்டு, தொடர்ந்த 5 நாட்களும் சில பெண்களை சபரிமலைக்கு ஏற்றி அனுப்பி, எப்படியாவது சந்நிதி முன் நிறுத்திவிட வேண்டும் என்று கேரள அரசு எடுத்த பகீரத முயற்சி, ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப் பட்டது.

இந்நிலையில் சபரிமலை விவகார சீராய்வு மனுக்களை விசாரிப்பது குறித்த அறிவிப்பை, உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது.

இந்த மறு சீராய்வு மனுக்கள் எல்லாம் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி விசாரிக்கப் படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், வரும் நவம்பர் 17ஆம் தேதி, மீண்டும் மண்டல பூஜைக்காகவும், மகரஜோதிக்காகவும் நடை திறக்கப் படுகிறது.

நடை திறக்கப்படும் நாளுக்கு நான்கு நாட்கள் முன் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories