வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

sabarimalai without people3 - 2026
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய சபரிமலை சந்நிதி முகப்பு… பதினெட்டாம் படி…

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!

இந்த அளவுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் தொடக்க நாட்களில் வராமல் இருப்பது சரித்திரத்தில் இல்லாத சரிவு என்கிறார்கள் பக்தர்கள். போலீஸார் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது இவை போன்றவைதான் இந்த சரிவுக்கு காரணமாகக் கூறப் படுகிறது.

sabarimalai without people - 2026
சபரிமலை மண்டல பூஜை காலங்களில் கடும் பரபரப்புடன் இரவு பகலாக பக்தர்கள் வந்து செல்லும் சுற்று மண்டபம் பக்தர்கள் எவரும் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது…

ஜனநாயகம் சோஷலிஸம் என்றெல்லாம் பேசும் கேரள கம்யூனிஸ அரசு, ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சபரிமலை பகுதியில் கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கேரள பிணரயி விஜயன் அரசு பக்தர்களுக்கு ஐந்து கட்டளைகளை விதித்திருப்பதாகக் கூறுகிறார்கள். கேரள போலீஸார் இதனை பக்தர்களிடம் பம்பையிலேயே தெரிவித்து விடுகிறார்கள். இதனை மீறினால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கைது செய்யப் படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்புகிறார்கள்.

sabarimala instructions - 2026
சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் நிலக்கல் போலீஸார் நோட்டீஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள கட்டளைகள்…

அந்தக் கட்டளைகள்…
1. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், குழுவாக எங்கேயும் அமரக் கூடாது; குழுவாக எங்கும் கூடி நிற்கக் கூடாது!
2. சரண கோஷத்தை சொல்லக் கூடாது
3. ஊடகங்களில் பேட்டி என்று கேட்டால், அவர்களிடம் எதுவும் பேசக் கூடாது.
4. ஆறு மணி நேரத்துக்கு மேல், பக்தர்கள் எவரும் சபரிமலை சந்நிதானத்தில் இருக்கக் கூடாது.
5. ஆறு மணி நேரத்தில் சபரி சந்நிதானத்தில் இருந்து கட்டாயம் வெளியேறி, போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
– மேற்கண்ட எச்சரிக்கைகளில் ஏதேனும் நீங்கள் தவறியிருந்தால் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
sabarimalai without people1 - 2026
சபரிமலை சந்நிதியில் கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டிய காவலர்கள், பக்தர்கள் இன்மையால் வெறுமனே கதை பேசிக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர்…

சபரிமலை என்றாலே, குழுவாக பயணம் செய்வதும், பக்தர்கள் கூடி சரண கோஷம் சொல்லி, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அழைத்துச் செல்வதுதான். மலையேற சிரமப் படும் போது, ஏத்தி விடய்யா தூக்கி விடய்யா என்று பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கைத்தாங்கலாக உதவி பாடி அனைவரிலும் ஐயப்பனைக் காண்பது மரபு, ஆனால், போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளும் பிணராயி விஜயனின் ஐந்து கட்டளைகளும் சபரிமலையின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் மரபையும் பக்தர்களின் உரிமையையும் உணர்வையும் மீறுவதாகவும் நசுக்குவதாகவும் உள்ளது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி என்ற ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, கம்யூனிஸ காட்டுமிராண்டித் தனங்களை அரங்கேற்றுகிறது பிணராயி விஜயன் அரசு என்று குமுறுகின்றனர் பக்தர்கள்.

1 COMMENT

  1. Those hindus who voted for pinarayi should now realise how he has insulted our culture,tradition and ayyappa and continues the assault on these. Congress has supported pinatayi….not condemning his action. From now on vote 4 party which supports our culture and tradition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories