வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

sabarimalai without people3 - 2026
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய சபரிமலை சந்நிதி முகப்பு… பதினெட்டாம் படி…

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!

இந்த அளவுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் தொடக்க நாட்களில் வராமல் இருப்பது சரித்திரத்தில் இல்லாத சரிவு என்கிறார்கள் பக்தர்கள். போலீஸார் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது இவை போன்றவைதான் இந்த சரிவுக்கு காரணமாகக் கூறப் படுகிறது.

sabarimalai without people - 2026
சபரிமலை மண்டல பூஜை காலங்களில் கடும் பரபரப்புடன் இரவு பகலாக பக்தர்கள் வந்து செல்லும் சுற்று மண்டபம் பக்தர்கள் எவரும் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது…

ஜனநாயகம் சோஷலிஸம் என்றெல்லாம் பேசும் கேரள கம்யூனிஸ அரசு, ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சபரிமலை பகுதியில் கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கேரள பிணரயி விஜயன் அரசு பக்தர்களுக்கு ஐந்து கட்டளைகளை விதித்திருப்பதாகக் கூறுகிறார்கள். கேரள போலீஸார் இதனை பக்தர்களிடம் பம்பையிலேயே தெரிவித்து விடுகிறார்கள். இதனை மீறினால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கைது செய்யப் படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்புகிறார்கள்.

sabarimala instructions - 2026
சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் நிலக்கல் போலீஸார் நோட்டீஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள கட்டளைகள்…

அந்தக் கட்டளைகள்…
1. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், குழுவாக எங்கேயும் அமரக் கூடாது; குழுவாக எங்கும் கூடி நிற்கக் கூடாது!
2. சரண கோஷத்தை சொல்லக் கூடாது
3. ஊடகங்களில் பேட்டி என்று கேட்டால், அவர்களிடம் எதுவும் பேசக் கூடாது.
4. ஆறு மணி நேரத்துக்கு மேல், பக்தர்கள் எவரும் சபரிமலை சந்நிதானத்தில் இருக்கக் கூடாது.
5. ஆறு மணி நேரத்தில் சபரி சந்நிதானத்தில் இருந்து கட்டாயம் வெளியேறி, போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
– மேற்கண்ட எச்சரிக்கைகளில் ஏதேனும் நீங்கள் தவறியிருந்தால் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்.

sabarimalai without people1 - 2026
சபரிமலை சந்நிதியில் கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டிய காவலர்கள், பக்தர்கள் இன்மையால் வெறுமனே கதை பேசிக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர்…

சபரிமலை என்றாலே, குழுவாக பயணம் செய்வதும், பக்தர்கள் கூடி சரண கோஷம் சொல்லி, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அழைத்துச் செல்வதுதான். மலையேற சிரமப் படும் போது, ஏத்தி விடய்யா தூக்கி விடய்யா என்று பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கைத்தாங்கலாக உதவி பாடி அனைவரிலும் ஐயப்பனைக் காண்பது மரபு, ஆனால், போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளும் பிணராயி விஜயனின் ஐந்து கட்டளைகளும் சபரிமலையின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் மரபையும் பக்தர்களின் உரிமையையும் உணர்வையும் மீறுவதாகவும் நசுக்குவதாகவும் உள்ளது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி என்ற ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, கம்யூனிஸ காட்டுமிராண்டித் தனங்களை அரங்கேற்றுகிறது பிணராயி விஜயன் அரசு என்று குமுறுகின்றனர் பக்தர்கள்.

1 COMMENT

  1. Those hindus who voted for pinarayi should now realise how he has insulted our culture,tradition and ayyappa and continues the assault on these. Congress has supported pinatayi….not condemning his action. From now on vote 4 party which supports our culture and tradition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories