December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

sabarimalai without people3 - 2025
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய சபரிமலை சந்நிதி முகப்பு… பதினெட்டாம் படி…

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!

இந்த அளவுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் தொடக்க நாட்களில் வராமல் இருப்பது சரித்திரத்தில் இல்லாத சரிவு என்கிறார்கள் பக்தர்கள். போலீஸார் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது இவை போன்றவைதான் இந்த சரிவுக்கு காரணமாகக் கூறப் படுகிறது.

sabarimalai without people - 2025
சபரிமலை மண்டல பூஜை காலங்களில் கடும் பரபரப்புடன் இரவு பகலாக பக்தர்கள் வந்து செல்லும் சுற்று மண்டபம் பக்தர்கள் எவரும் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது…

ஜனநாயகம் சோஷலிஸம் என்றெல்லாம் பேசும் கேரள கம்யூனிஸ அரசு, ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சபரிமலை பகுதியில் கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கேரள பிணரயி விஜயன் அரசு பக்தர்களுக்கு ஐந்து கட்டளைகளை விதித்திருப்பதாகக் கூறுகிறார்கள். கேரள போலீஸார் இதனை பக்தர்களிடம் பம்பையிலேயே தெரிவித்து விடுகிறார்கள். இதனை மீறினால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கைது செய்யப் படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்புகிறார்கள்.

sabarimala instructions - 2025
சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் நிலக்கல் போலீஸார் நோட்டீஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள கட்டளைகள்…

அந்தக் கட்டளைகள்…
1. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், குழுவாக எங்கேயும் அமரக் கூடாது; குழுவாக எங்கும் கூடி நிற்கக் கூடாது!
2. சரண கோஷத்தை சொல்லக் கூடாது
3. ஊடகங்களில் பேட்டி என்று கேட்டால், அவர்களிடம் எதுவும் பேசக் கூடாது.
4. ஆறு மணி நேரத்துக்கு மேல், பக்தர்கள் எவரும் சபரிமலை சந்நிதானத்தில் இருக்கக் கூடாது.
5. ஆறு மணி நேரத்தில் சபரி சந்நிதானத்தில் இருந்து கட்டாயம் வெளியேறி, போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
– மேற்கண்ட எச்சரிக்கைகளில் ஏதேனும் நீங்கள் தவறியிருந்தால் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்.

sabarimalai without people1 - 2025
சபரிமலை சந்நிதியில் கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டிய காவலர்கள், பக்தர்கள் இன்மையால் வெறுமனே கதை பேசிக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர்…

சபரிமலை என்றாலே, குழுவாக பயணம் செய்வதும், பக்தர்கள் கூடி சரண கோஷம் சொல்லி, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அழைத்துச் செல்வதுதான். மலையேற சிரமப் படும் போது, ஏத்தி விடய்யா தூக்கி விடய்யா என்று பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கைத்தாங்கலாக உதவி பாடி அனைவரிலும் ஐயப்பனைக் காண்பது மரபு, ஆனால், போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளும் பிணராயி விஜயனின் ஐந்து கட்டளைகளும் சபரிமலையின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் மரபையும் பக்தர்களின் உரிமையையும் உணர்வையும் மீறுவதாகவும் நசுக்குவதாகவும் உள்ளது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி என்ற ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, கம்யூனிஸ காட்டுமிராண்டித் தனங்களை அரங்கேற்றுகிறது பிணராயி விஜயன் அரசு என்று குமுறுகின்றனர் பக்தர்கள்.

1 COMMENT

  1. Those hindus who voted for pinarayi should now realise how he has insulted our culture,tradition and ayyappa and continues the assault on these. Congress has supported pinatayi….not condemning his action. From now on vote 4 party which supports our culture and tradition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories