சபரிமலை விவகாரம்: எஸ்பி., அலுவலகங்கள் நோக்கி மாபெரும் பேரணி: பாஜக., அறிவிப்பு!

nhari bjp kottayyam - 2026

சபரிமலை விவகாரத்தில் மேலும் மேலும் நெருக்கடியையும் சிக்கலையும் மாநில அரசும் போலீஸாரும் கொடுப்பதால், இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாபெரும் பேரணி ஒன்றை சபரிமலை எஸ்பி அலுவலகம் நோக்கி நடத்த இருப்பதாக, பாஜகவின் என்.ஹரி கூறியுள்ளார்.

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் இதனை உடனடியாக அமல் படுத்தியே ஆக வேண்டும் என்று களம் இறங்கி, பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் கேரள கம்யூனிஸ அரசால் சபரிமலையில் பெரும் பதற்றமும் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் தூபம் போடும் விதமாக, ஒரு வழிபாட்டுத் தலத்தில் 144 தடை உத்தரவு போட்டு, சரண கோஷம் விளிக்கக் கூடாது, கூட்டம் கூடக் கூடாது, யாரும் தங்கக் கூடாது என்றெல்லாம் கெடுபிடி காட்டி வருகிறது கேரள போலீஸ்! இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கேரள போலீஸார் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். மேலும், சரண கோஷம் விளிப்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் படும் என்று கேரள மாநில பாஜக., அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..

கேரள மாநிலம் கோட்டயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஹரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருகின்றனர்.

கேரளத்துக்கு என்று தேசிய மரியாதை ஒன்று இருந்தது. அதை அரசு கெடுத்துக் கொண்டிருக்கிறது. சிபிஎம் பாசிஸ அரசை நடத்தி வருகிறது. வரும் 28ம் தேதி எல்லா எஸ்பி., அலுவலகத்தையும் நோக்கி பேரணி நடத்தப் படும். இங்கும் எஸ்பி அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப் படும். போலீஸ் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் கேரள அரசை எதிர்த்து இந்தப் பேரணி நடத்தப் படும்.

நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து பாஜக., தலைவர் கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்… என்று கூறினார் என்.ஹரி.

1 COMMENT

  1. Mikka Adhirchiyayum VaruthathayumAlikkikum seidhi . Sabari Malai Swamy Ayyappanai Dharisikka Varum Bhakthargal Sawmye Sharanam Ayyappa Enum Goshathathirku Kuda Thadai Seidhiruppadhu Mikka Varuthathai Tharugiradhu . Nam Hindhu Dharmathil endha Oru Pujai ! Viradham Ella vatrirukku me Oru Vigyana adipadayan Karanam Iruukm . Adhai Purindhukkondu Idhu Ponra Porattangalai thavirpadhu Mikka Adhyawasyamana . Ayyappa Swamy than Indha Prasnaikku Oru Nalla Vazikkaatta Vendum Enbhadhe Enadhu Aathmaarthamaana Prarthanai .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories