December 5, 2025, 12:19 PM
26.9 C
Chennai

சபரிமலை விவகாரம்: எஸ்பி., அலுவலகங்கள் நோக்கி மாபெரும் பேரணி: பாஜக., அறிவிப்பு!

nhari bjp kottayyam - 2025

சபரிமலை விவகாரத்தில் மேலும் மேலும் நெருக்கடியையும் சிக்கலையும் மாநில அரசும் போலீஸாரும் கொடுப்பதால், இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாபெரும் பேரணி ஒன்றை சபரிமலை எஸ்பி அலுவலகம் நோக்கி நடத்த இருப்பதாக, பாஜகவின் என்.ஹரி கூறியுள்ளார்.

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் இதனை உடனடியாக அமல் படுத்தியே ஆக வேண்டும் என்று களம் இறங்கி, பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் கேரள கம்யூனிஸ அரசால் சபரிமலையில் பெரும் பதற்றமும் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் தூபம் போடும் விதமாக, ஒரு வழிபாட்டுத் தலத்தில் 144 தடை உத்தரவு போட்டு, சரண கோஷம் விளிக்கக் கூடாது, கூட்டம் கூடக் கூடாது, யாரும் தங்கக் கூடாது என்றெல்லாம் கெடுபிடி காட்டி வருகிறது கேரள போலீஸ்! இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கேரள போலீஸார் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். மேலும், சரண கோஷம் விளிப்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் படும் என்று கேரள மாநில பாஜக., அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..

கேரள மாநிலம் கோட்டயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஹரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருகின்றனர்.

கேரளத்துக்கு என்று தேசிய மரியாதை ஒன்று இருந்தது. அதை அரசு கெடுத்துக் கொண்டிருக்கிறது. சிபிஎம் பாசிஸ அரசை நடத்தி வருகிறது. வரும் 28ம் தேதி எல்லா எஸ்பி., அலுவலகத்தையும் நோக்கி பேரணி நடத்தப் படும். இங்கும் எஸ்பி அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப் படும். போலீஸ் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் கேரள அரசை எதிர்த்து இந்தப் பேரணி நடத்தப் படும்.

நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து பாஜக., தலைவர் கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்… என்று கூறினார் என்.ஹரி.

1 COMMENT

  1. Mikka Adhirchiyayum VaruthathayumAlikkikum seidhi . Sabari Malai Swamy Ayyappanai Dharisikka Varum Bhakthargal Sawmye Sharanam Ayyappa Enum Goshathathirku Kuda Thadai Seidhiruppadhu Mikka Varuthathai Tharugiradhu . Nam Hindhu Dharmathil endha Oru Pujai ! Viradham Ella vatrirukku me Oru Vigyana adipadayan Karanam Iruukm . Adhai Purindhukkondu Idhu Ponra Porattangalai thavirpadhu Mikka Adhyawasyamana . Ayyappa Swamy than Indha Prasnaikku Oru Nalla Vazikkaatta Vendum Enbhadhe Enadhu Aathmaarthamaana Prarthanai .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories