மோடி ‘ராக்ஸ்…’!ஈரானுடன் கலக்கல் ஒப்பந்தம்! ரூபாயில் ‘ஆயில்’!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரான் அதிபர்

புது தில்லி : இந்திய ரூபாயை அளித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் – இந்தியா இடையே கையெழுத்தானது. இது சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கும் மோடிக்கும் கிடைத்த மிகப் பெரிய திருப்புமுனை என்று கூறப் படுகிறது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிலிருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவ.4 ஆம் தேதிக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் பொருளாதாரத் தடை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார். 

ஆனால், இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்தது. அமெரிக்க டாலரில் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பொருளைக் கொடுத்து அளவு குறைந்த நிலையிலும் எண்ணெய் வர்த்தகத்தை தொடர விரும்பியது.  இந்நிலையில் தனது நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

இத்தகைய சூழ்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, அதற்கான தொகையை அமெரிக்க டாலராக செலுத்தாமல் இந்திய ரூபாயாக செலுத்த இந்தியா – ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு பதிலாக பாதியளவு பொருட்களை ஈரானுக்கு அளித்தும்,  மீதத் தொகையை ரூபாயாக செலுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஈரான் தேசிய கச்சா எண்ணெய்க் கழகத்தின் யூகோ வங்கிக் கணக்கில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொகையை செலுத்தும்.

டாலருக்கு பதிலாக ரூபாயாக வர்த்தகத்தை மேற்கொள்வதால், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்! இந்தியா கச்சா எண்ணெய்க்கே அதிக அளவில் டாலரை செலுத்தி வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது இனி தவிர்க்கப் படும்!

ரஷ்ய, சீன கப்பல் நிறுவனங்கள், இந்திய ஈரான் வர்த்தகத்தை ஊக்கப் படுத்தியுள்ளன. அமெரிக்காவின் ஒப்புதலின் கீழ் இந்தியா ஈரானுக்கு விவசாயம் சார்ந்த பொருள்கள், உணவு வகைகள், மருந்துகள், மருந்து உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும். ஆனால், பெட்ரோலிய பொருள்கள், பெட்ரோ வேதிப் பொருள்கள், ஆட்டோமொபைல்ஸ், இரும்பு, கிராஃபைட், உயர் உலோகங்கள் ஆகியவற்றை டெஹ்ரானுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது! இந்த ஒப்பந்தத்தின் கீழ் இனி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

முன்னதாக, கச்சா எண்ணெய்க்கான தொகையில் 55 சதம் யூரோவாகவும், 45 சதம் ரூபாயாகவும் செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. பின்னர், யூரோவுக்கு பதிலாக 50 சதம் அத்தியாவசியப் பொருள்களாகவே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

India will import crude oil from Iran using a rupee-based payment mechanism, an industry source involved in discussions told Reuters on Thursday, adding that 50 percent of those payments will be used for exporting items to Tehran. State-owned UCO Bank is expected to announce the payment mechanism in the next 10 days, the source said.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories