கம்யூனிஸ்ட்களின் கடைசி மாநிலம் கேரளம்: முடிவுரை எழுதிய பிணராயி விஜயன்!

pinarayi vijayan - 2026

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.

இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது. வன்முறைகளுக்கும் கொலை வெறிக்கும் மட்டுமே தங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக அவ்வப்போது வன்முறையைத் தூண்டிவிட்டு பதிலடி பெற்றுக் கொள்கின்றனர். இன்னொரு (அரை) மாநிலமான திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் துடைத்தெறியப் பட்டார்கள். அங்கே பாஜக., அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தற்போது தனக்குத்தானே குழிவெட்டிக் கொண்டுள்ளார் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ முதல்வர் பிணராயி விஜயன். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட கொள்ளிக்கட்டைதான் சபரிமலை எனும் தீப்பற்றி எரியும் விவகாரம்!

கேரளத்தில் சர்ச்சுகள் விவகாரத்தில் வாய் அடக்கி மௌனியாக இருந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இந்த உத்தரவை அமல்படுத்தினால் மாநிலம் கொந்தளிக்கும் என்று பதில் கொடுத்தவர், தற்போது சபரிமலை விவகாரத்தில் வலுக் கட்டாயமாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் ஒரு படி மேலே போய், இந்துக்கள் என்றால் ஏமாளிகள் என்று செயல்பட்டார். அதன் விளைவு, மாநிலம் இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆப்பசைத்த குரங்கு போல், சபரிமலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டு முழித்தாலும் தன் பிடிவாதத்தை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார் பிணராயி விஜயன். சபரிமலையில் இரு பெண்கள் வழிபாடு செய்த போது, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதைக் கண்டு கேரளத்து ஹிந்துக்கள் கைகொட்டிச் சிரிப்பதுடன், முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் கம்யூனிஸ பொய்களை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கருத்து கூறியபோது, சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். ஐயப்பனை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது போலீசாரின் கடமை. கேரள அரசும் தனது கடமையை தான் செய்தது. சபரிமலை வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். இரண்டு பெண்களும் தரிசனம் செய்த போது பக்தர்கள் யாரும் எதிர்க்க வில்லை. அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைக்கு பாஜக,,வே காரணம். பெண் பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கும் என்று மேலும் தன் பிடிவாத குணத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அந்தப் பெண்கள் எப்படி சபரிமலை கொண்டு வரப் பட்டார்கள், எந்த நேரத்தில் கோயிலுக்கு வரவழைக்கப் பட்டார்கள், என்பதெல்லாம் கேரளத்து மக்களுக்கு அத்துபடி. இருந்தும் பொய் சொல்லும் பிணராயி விஜயனுக்கு மக்களின் உருவில் ஐயப்பனே பதில் கொடுப்பான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories