December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

கம்யூனிஸ்ட்களின் கடைசி மாநிலம் கேரளம்: முடிவுரை எழுதிய பிணராயி விஜயன்!

pinarayi vijayan - 2025

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.

இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது. வன்முறைகளுக்கும் கொலை வெறிக்கும் மட்டுமே தங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக அவ்வப்போது வன்முறையைத் தூண்டிவிட்டு பதிலடி பெற்றுக் கொள்கின்றனர். இன்னொரு (அரை) மாநிலமான திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் துடைத்தெறியப் பட்டார்கள். அங்கே பாஜக., அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தற்போது தனக்குத்தானே குழிவெட்டிக் கொண்டுள்ளார் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ முதல்வர் பிணராயி விஜயன். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட கொள்ளிக்கட்டைதான் சபரிமலை எனும் தீப்பற்றி எரியும் விவகாரம்!

கேரளத்தில் சர்ச்சுகள் விவகாரத்தில் வாய் அடக்கி மௌனியாக இருந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இந்த உத்தரவை அமல்படுத்தினால் மாநிலம் கொந்தளிக்கும் என்று பதில் கொடுத்தவர், தற்போது சபரிமலை விவகாரத்தில் வலுக் கட்டாயமாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் ஒரு படி மேலே போய், இந்துக்கள் என்றால் ஏமாளிகள் என்று செயல்பட்டார். அதன் விளைவு, மாநிலம் இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆப்பசைத்த குரங்கு போல், சபரிமலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டு முழித்தாலும் தன் பிடிவாதத்தை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார் பிணராயி விஜயன். சபரிமலையில் இரு பெண்கள் வழிபாடு செய்த போது, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதைக் கண்டு கேரளத்து ஹிந்துக்கள் கைகொட்டிச் சிரிப்பதுடன், முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் கம்யூனிஸ பொய்களை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கருத்து கூறியபோது, சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். ஐயப்பனை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது போலீசாரின் கடமை. கேரள அரசும் தனது கடமையை தான் செய்தது. சபரிமலை வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். இரண்டு பெண்களும் தரிசனம் செய்த போது பக்தர்கள் யாரும் எதிர்க்க வில்லை. அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைக்கு பாஜக,,வே காரணம். பெண் பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கும் என்று மேலும் தன் பிடிவாத குணத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அந்தப் பெண்கள் எப்படி சபரிமலை கொண்டு வரப் பட்டார்கள், எந்த நேரத்தில் கோயிலுக்கு வரவழைக்கப் பட்டார்கள், என்பதெல்லாம் கேரளத்து மக்களுக்கு அத்துபடி. இருந்தும் பொய் சொல்லும் பிணராயி விஜயனுக்கு மக்களின் உருவில் ஐயப்பனே பதில் கொடுப்பான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories