February 22, 2026, 7:16 PM
29 C
Chennai

அந்தமான் – இந்தியாவின் பாதுகாப்புக் கோட்டை! மோடியின் பயணத்துக்குப் பின் வேகமெடுக்கும் மாற்றங்கள்!

andaman gohacha - 2026

அந்தமானை பாதுகாப்பு கோட்டையாக மாற்றிவருகிறது இந்தியா! அங்கே புதிய ஐஎன்எஸ் கோஹாசா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பலத்தை அதிகப்படுத்தும் நோக்கோடு அந்தமானில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துகிறது இந்தியா. குறிப்பாக மோடியின் அந்தமான் பயணத்துக்குப் பின்னர் பணிகள் பல வேகமெடுத்துள்ளன.

தற்போது அந்தமானில் புதிய விமானத்தளம் தயாராகி வருகிறது. இந்த தளம் சிறிய அளவிலான போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கும் அளவுக்கு தயாராகி வருகிறது. 1000 கிமீ என பரந்துள்ள அந்தமான் தீவுப் பகுதியில் கூடுதல் தரையிறங்கு தளமாகவும் இராணுவ விமானிகள் ஆபரேட்டிங தளமாகவும் இந்த புதிய தளம் செயல்படும்.

ஐஎன்எஸ் ஷிவ்பூர் எனப்படும் இந்த தளம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது, ஐஎன்எஸ் கோஹாசா என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. போர்ட் பிளேர், கார் நிகோபார் மற்றும் கடற்படையின் ஐஎன்எஸ் பாஸ் தளங்களுடன் கூடுதலாக இந்த புதிய தளமும் செயல்பட உள்ளது.

அந்தமான் நிகோபார் கமாண்ட்டின் சீப் வைஸ் அட்மிரல் பிம்லா வெர்மா வரும் ஜனவரி 24ல் இந்தப் புதிய தளத்தை திறக்க உள்ளார். அண்மைக் காலமாக இந்தியா அந்தமானில் தனது பாதுகாப்புக் கரங்களை வலுப்படுத்தி வருகிறது. மலாக்கா நீரிணைக்கு மிக அருகே அமைந்துள்ளதால் அதன் அமைவிடம் முக்கியத்துவம் பெறுகிறது. 70 சதவீத வர்த்தகக் கப்பல்கள் செல்லும் வழியாக இருப்பதால் இங்கு நமது ஆதிக்கத்தை செலுத்துவது முக்கியமானதாக அமைகிறது. இதனைப் புரிந்து கொண்ட மோடியின் மத்திய அரசு, இங்கே முப்படைகளும் முக்கியத்துவம் பெறும் வகையில் செயல்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளது.

இப்போது, இந்தியாவின் ஒரே முப்படை நடவடிக்கை கட்டளையகம் அந்தமானில்தான் உள்ளது. முப்படை வீரர்களும் ஒரு கடற்படை அதிகாரிக்கு கீழே இயங்குவர். கடற்படை தவிர கடலோர காவல்படை, விமானப்படை மற்றும் ராணுவமும் தனது தனித்த இருப்பை இங்கே கொண்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories