சபரிமலையில் மீண்டும் ஒரு பெண்! தரிசனம் செய்ததாக மாறுவேடத்தில் ‘மஞ்சு’ என்ற பெண் ஊடகத்தில் பேட்டி!

manju sabarimalai case - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் மேலும் ஒரு பெண் தரிசனம் செய்தார் என்று தகவல்கள் பரவின.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான மஞ்சு என்பவர் ஐயப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு கேரள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில், மஞ்சு என்ற 35 வயது பெண், வயதானவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜன.2ம் தேதி கேரள அரசு இரு பெண்கள் சந்நிதானத்தில் முன்னிறுத்தியதை அடுத்து, பெரும் கலவரம் மூண்டது. ஆனால் சபரிமலையின் ஆசாரங்களைக் குலைப்பது என்பதில் உறுதியாக உள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன், மேலும் பல பெண்களை சந்நிதானத்தில் நிறுத்தியே தீருவேன் என்று கூறியுள்ளார்.

மகர விளக்குக்கு முன், மேலும் சில பெண்களை தரிசனம் செய்ய வைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியதை அடுத்து, பம்பை முதல் சபரிமலை வரையிலும் பக்தர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு (35) என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்ததாக கேரள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனது தலைமுடிக்கு வெள்ளை ‘டை’ அடித்து, மாறுவேடத்தில் சாமி தரிசனம் செய்ததாக கூறியுள்ளார். இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தை பலரும் மறுக்கின்றனர். அவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவில்லை என்றும், வேறு ஓர் இடத்தில் இருந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சந்நிதி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் மாலை 4 மணி முதல் ஆராய்ந்து வருகின்றனர்.

போலீஸார் அனுமதி இல்லாமல், மாறுவேடத்தில் சென்று வந்ததால், இது போலீஸாரின் பாதுகாப்புக் குளறுபடி என்று குற்றம் சாட்டப்பட்டது. பயங்கரவாதிகள் எவர் வேண்டுமானாலும் இப்படி மாறு வேடம் பூண்டு சபரிமலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

மாறுவேடம் போட்டது என்பது கிரிமினல் குற்றம் என்பதால், பம்பையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, போலீஸார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories