ஹைதராபாத்: அது போலி என்கவுன்டர் என்று தெரியவந்தால், நடவடிக்கை நிச்சயம் என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கால்துறையினர் நடத்தியது போலி என்கவுன்டர் என்பது இதில் தெரியவந்தால், அது குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
போலி என்கவுன்டர் என்றால் உரிய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு பதில் கடிதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari