முந்திச் செல்ல முயன்று கவிழ்ந்த பஸ் : மேற்கு வங்கத்தில் 13 பேர் பலி

Published:

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குத்குரி கிராம மக்கள் மூன்று பஸ்களில் நாடியா மாவட்டத்தில் உள்ள மாயாபூர் கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற பஸ்கள் ஒன்றை ஒன்று வேகமாக முந்திச் சென்றுள்ளது. அப்போது, பார்த்வான் – காத்வா சாலையில் தேவாந்திகி கிராமத்தின் அருகே வேகமாகச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அங்கு வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பஸ்சில் சுமார் 70 பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img