6 பேரின் உடல் மறு பிரேத பரிசோதனை: உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

Published:

ஆந்திராவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதி சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்பதால், உத்தரவு பிறப்பிக்க முடியாது என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆந்திர நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட 6 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணையும் வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img