அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!

Published:

tamilisai2 - 2026பாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”சென்னையில் நடைபெறவுள்ள பாஜக., நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அமித்ஷா வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் பாஜக., நிர்வாக ரீதியாக பலமாக உள்ளது. இது அமைப்பு ரீதியான கூட்டம் என்பதால் இது குறித்து கருத்துப் பரிமாற்றம் இருக்கும்” என்று கூறினார்.

tamilisai1 - 2026

அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள தமிழிசை, முன்னதாக சென்னை விஜிபி கோல்டன் பீச் ரெசார்டுக்கு அருகே மாநாட்டுக்கான பந்தல் போடும் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img