December 6, 2025, 1:10 AM
26 C
Chennai

தில்லியில் உண்ணாவிரதம்: நாயுடுவுடன் ராகுல் காந்தி பங்கேற்பு!

rahul naidu2 - 2025

தில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்! நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, இன்று தில்லியில் உள்ள ஆந்திர பவனில் 12 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இதற்காக ஆந்திராவில் இருந்து இரண்டு ரயில்கள் மூலம் மக்களைத் திரட்டிக் கொண்டு, தில்லிக்கு வந்துள்ளார் நாயுடு.

இன்று காலை தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கறுப்புச் சட்டை அணிந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

rahul naidu - 2025

இந்தப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகள் என கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நாயுடுவுக்கு ஆதரவு கொடுக்க, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நாயுடுவுக்கு ஆதரவாக காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆச்சரியப் படும் விதத்தில் அவரது பங்கேற்பு இருந்தது. காரணம், ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் நாயுடுவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனியே போட்டியிடுகிறது. அதே நேரம், ஆந்திரப் பிரதேச பிரச்னைக்கும் மூல காரணமாக காங்கிரஸே இருந்துள்ளது. முன்னேற்பாடு ஏதுமின்றி அவசர கதியில் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து, இன்றளவும் ஆந்திரத்தில் பிரச்னைகள் அதிகரிக்க காங்கிரஸே காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு நாயுடு நடத்தும் உண்ணாவிரதக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories