February 22, 2026, 7:04 PM
29 C
Chennai

ரஃபேல் இந்நேரம் இருந்திருந்தால்..? நிலைமையே வேறாக இருந்திருக்கும்: மோடி

 

modi indiatodayconclave - 2026புதுதில்லி: இண்டியா டுடே கான்க்ளேவ் 2019 என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஃபேல் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால், நிலைமையே வேறாக இருந்திருக்கும்! ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை தற்போது எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று பேசினார்.

பிரதமர் மோடியை அதிகம் கேலியும் கிண்டலும் செய்து, எதிர்மறை விமர்சனம் மட்டுமே செய்து வரும் ராஜ்தீப் சர்தேசாயின் இடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி என்று நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டதை பகிர்ந்து வந்தார்கள்.

பரப்பான சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை தான் பிடித்துவைத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் விடுவித்ததன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

ரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையையும் தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள். தற்போதுள்ள சூழலில் ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் இந்த நிகழ்வின் விளைவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

ரஃபேல் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால் தான் நமக்கு இந்த அளவுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் பின்னால் உலக நாடுகள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு கொண்டிருந்த நிலையில், நம் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்த கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியர்கள் எல்லோரும் ஒரே குரலில் ரஃபேல் விமானம் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், ரஃபேல் மீதான எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் மோடியை எதிர் அரசியல் செய்யுங்கள்; மோடி தீட்டிய அரசுத் திட்டங்கள் தரும் பலன்கள் குறித்து குறை கூறுங்கள்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை தரக்கூடியதுதான் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories