காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!

digvijaysingh - 2026

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை இப்போது காறித் துப்புகிறார்கள் டிவிட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும்! “Digvijaya Singh”

அவர் பாஜக.,வை விமர்சிக்கும்போது அவரது கருத்துகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிடும். சில நேரம் தேசத் துரோகக் கருத்தாகவும் அமைந்துவிடும். அப்படி ஒரு தேச விரோதக் கருத்தைத்தான் இப்போது திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்!

முன்னர் இஸ்லாமியர்களை திருப்திப் படுத்துவதற்காக, இஸ்லாமிய வாக்கு வங்கியை மனதில் கொண்டு, பாஜக., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வந்தார்,. அப்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது கருத்துகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்தனர்.

இதனால் சோனியா உத்தரவின்பேரில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து வந்தார். தற்போதும் அப்படி சில கருத்துகளை அவிழ்த்து விட்டு வருகிறார். அவை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

பிப்.14ம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக ஒரு கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது… புல்வாமாவில் நடந்தது தாக்குதல் அல்ல. அது ஒரு சாதாரண விபத்துதான். அதற்காக போர் நடத்துவது தேவையில்லை… என்றார் அவர்.

அவரது இந்த உளறல் பேச்சு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உள்நோக்கத்துடன் தெரிவித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் பேச்சு, காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திக்விஜய் சிங் ஒரு பேட்டியின் குறிப்பிட்டது, காங்கிரஸ் தலைவர்களையே மிரட்சியில் தள்ளியது. அப்போது அவர், “நான் பிரசாரம் செய்ய ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு விழாது. அடிதான் விழும்“ என்றார்.

இதை அடுத்து வாய் மூடி மௌனியாக இருந்த திக் விஜய் சிங், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மும்முரமாக பரபரப்பான நிலையை எட்டியிருப்பதால், மீண்டும் உள்நோக்கத்துடன் கருத்துகளைக் கூறி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.!

இந்நிலையில் திக்விஜய் சிங்கை பாஜக.,வினர் திட்டித் தீர்க்கிறார்கள். வார்த்தைப் போர் வெடித்துள்ளது. பத்திரிகைகளில் பேட்டிகள் அதிகம் கொடுக்கிறார்கள். ஊடகப் பேட்டிகளுடன் சமூக ஊடகமான டிவிட்டரில் கழுவி ஊற்றுகிறார்கள். டிவிட்டரில் https://twitter.com/search?q=%22Digvijaya%20Singh%22 என்ற தேடலில் திக்விஜய் சிங்கை பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories