வங்கிக் கடன் மோசடி செய்து தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!

nirav modi - 2026

லண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றார் வைர வியாபாரி நீரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஸியும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டார்.

நிரவ் மோடி குழுமத்துக்கு கடன்கள் அதிகம் கொடுத்தும், கடன் எதுவும் வசூல் ஆகாத நிலையில், நிரவ் மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தது பிஎன்பி வங்கி. இதை அடுத்து, யாருக்கும் தெரியாமல், லண்டனுக்கு கடந்த ஆண்டு குடும்பத்துடன் தப்பி ஓடினார் நீரவ் மோடி!

இதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது மத்திய அமலாக்கத் துறை!

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி வருவதாக, டெலகிராப் ஊடக செய்தியாளர் பேட்டி எடுத்து வெளியிட்டார். அவர் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப் பட்டது. இதை அடுத்து, லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் நிரவ் மோடி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறப் படுகிறது.

முன்னதாக கிங் பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவும் இது போல் நாட்டை விட்டு ஓடினார். அவரை கைது செய்ய நெருக்கடி கொடுத்தது இந்திய அரசு. இதை அடுத்து அவர் கடந்த 2017ல் கைது செய்யப் பட்டார். ஆயினும், அவர் குறித்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அவர் உடனடியாக இந்தியா கொண்டுவரப் பட முடியவில்லை.

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories