வங்கிக் கடன் மோசடி செய்து தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!

nirav modi - 2026

லண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றார் வைர வியாபாரி நீரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஸியும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டார்.

நிரவ் மோடி குழுமத்துக்கு கடன்கள் அதிகம் கொடுத்தும், கடன் எதுவும் வசூல் ஆகாத நிலையில், நிரவ் மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தது பிஎன்பி வங்கி. இதை அடுத்து, யாருக்கும் தெரியாமல், லண்டனுக்கு கடந்த ஆண்டு குடும்பத்துடன் தப்பி ஓடினார் நீரவ் மோடி!

இதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது மத்திய அமலாக்கத் துறை!

இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி வருவதாக, டெலகிராப் ஊடக செய்தியாளர் பேட்டி எடுத்து வெளியிட்டார். அவர் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப் பட்டது. இதை அடுத்து, லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் நிரவ் மோடி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறப் படுகிறது.

முன்னதாக கிங் பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவும் இது போல் நாட்டை விட்டு ஓடினார். அவரை கைது செய்ய நெருக்கடி கொடுத்தது இந்திய அரசு. இதை அடுத்து அவர் கடந்த 2017ல் கைது செய்யப் பட்டார். ஆயினும், அவர் குறித்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அவர் உடனடியாக இந்தியா கொண்டுவரப் பட முடியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories