December 5, 2025, 4:29 PM
27.9 C
Chennai

காயலான்கடைக்குப் போனது காங்கிரஸார் உருவாக்கிய ‘காவி தீவிரவாதம்’! சுவாமி அஸீமானந்தா விடுதலை!

aseemanand - 2025

பஞ்சகுலா: சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோனியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில், கடந்த 2007 பிப்ரவரி 18ஆம் தேதி, லாகூருக்கும் புது தில்லிக்கும் இயக்கப்பட்ட சம்ஜௌதா ரயிலில் அரியானா மாநிலம் பானிபட் அருகே இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 68 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் சௌகான், ரஜீந்தர் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க…

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

காவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்

காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் குற்றம் சாட்டப் பட்டனர். ஆனால், இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக ஒரு சொல்லை உருவாக்கினார். அதுதான் காவி தீவிரவாதம் என்பது.

இதை அடுத்து, 2010 ஆம் ஆண்டில் இந்த வழக்கு புது விதமான நோக்கில் மாற்றப் பட்டது. இந்த மாற்றுதலின் படி, தாங்கள் உருவாக்கிய காவி தீவிரவாதம் என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்க ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸார், இந்து இயக்கங்களைச் சேர்ந்த சிலர் மீது வலுக்கட்டாயமாக பொய்யான புனைவுகளைச் சுமத்தி சுவாமி அஸீமானந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், காலப் போக்கில், இது ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொற்படி உருவாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சிலர் வெளிப்படையாக கருத்துகளைக் கூறினர். நீதிமன்றம் இவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது.

முன்னதாக என்.ஐ.ஏ., நீதிமன்றம் பாகிஸ்தானி பெண்மணி ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்த சாட்சிகளின் மீதான விசாரணை ஆய்வு செய்ய மனு அளித்தார். அது தள்ளுபடி செய்யப் பட்டது.

இந்நிலையில், அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Big Blow To ‘Saffron Terror’ Theory: Four Including Swami Aseemanand Acquitted In Samjhauta Blast Case

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories