காயலான்கடைக்குப் போனது காங்கிரஸார் உருவாக்கிய ‘காவி தீவிரவாதம்’! சுவாமி அஸீமானந்தா விடுதலை!

aseemanand - 2026

பஞ்சகுலா: சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோனியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில், கடந்த 2007 பிப்ரவரி 18ஆம் தேதி, லாகூருக்கும் புது தில்லிக்கும் இயக்கப்பட்ட சம்ஜௌதா ரயிலில் அரியானா மாநிலம் பானிபட் அருகே இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 68 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் சௌகான், ரஜீந்தர் சௌத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க…

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

காவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்

காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் குற்றம் சாட்டப் பட்டனர். ஆனால், இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக ஒரு சொல்லை உருவாக்கினார். அதுதான் காவி தீவிரவாதம் என்பது.

இதை அடுத்து, 2010 ஆம் ஆண்டில் இந்த வழக்கு புது விதமான நோக்கில் மாற்றப் பட்டது. இந்த மாற்றுதலின் படி, தாங்கள் உருவாக்கிய காவி தீவிரவாதம் என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்க ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸார், இந்து இயக்கங்களைச் சேர்ந்த சிலர் மீது வலுக்கட்டாயமாக பொய்யான புனைவுகளைச் சுமத்தி சுவாமி அஸீமானந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், காலப் போக்கில், இது ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொற்படி உருவாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சிலர் வெளிப்படையாக கருத்துகளைக் கூறினர். நீதிமன்றம் இவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது.

முன்னதாக என்.ஐ.ஏ., நீதிமன்றம் பாகிஸ்தானி பெண்மணி ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்த சாட்சிகளின் மீதான விசாரணை ஆய்வு செய்ய மனு அளித்தார். அது தள்ளுபடி செய்யப் பட்டது.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

இந்நிலையில், அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Big Blow To ‘Saffron Terror’ Theory: Four Including Swami Aseemanand Acquitted In Samjhauta Blast Case

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories