January 19, 2025, 2:38 PM
27.8 C
Chennai

காந்தியும், நேருவும் தங்கள் பதவிக்கான அச்சுறுத்தலாக நேதாஜியைப் பார்த்தனர்: சுப்பிரமணிய சுவாமி

subramanian-swami புது தில்லி: மகாத்மா காந்தியும், நேருவும், தங்கள் பொறுப்பு, பதவிகளுக்கான அச்சுறுத்தலாக புரட்சிகரத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பார்த்தனர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமானோர் சுவாமியின் டிவிட் தகவலை ரிடிவிட் செய்திருந்தனர். முன்னதாக, இந்திய உளவுத் துறையால் நேதாஜியின் உறவினர்கள் சிசிர் குமார் போஸ், அமியா நாத் போஸ் உள்ளிட்டோர் சுமார் 20 வருட காலத்துக்கு நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதை அடுத்து, சுவாமி இவ்வாறு தனது டிவிட்டரில் பதிவிட்டார்.  

சுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தியாவில், சுயநலம்தான் முதலில்! தங்கள் பதவிகளுக்கன அச்சுறுத்தலாக நேதாஜியை காந்தியும் நேருவும் பார்த்தனர் என்றூ கடந்த ஜனவரி 24ல் சுவாமி டிவிட் செய்திருந்தார். அது, வைரலாக 194 பேரால் ரிடிவிட் செய்யப்பட்டு பரவியது. இந்நிலையில், இன்று அவர் இன்னொரு டிவிட் செய்தார். நேதாஜி கொலை விவகாரத்தில் இன்னொன்றையும் சேர்க்கவேண்டும்… நேருவினால் திருடப்பட்டதாகிய, ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஐ.என்.ஏ.வின் இதயக் கருவூலத் தகவல் இப்போது முறிந்து போனது. ..  

இந்நிலையில், உளவு வேலை விவகாரத்தில் அது காங்கிரஸின் டி.என்.ஏ (இரத்தத்தில் ஊறிய செயல்) என்று பாஜகவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் வெளியே கசிந்தபோது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங், குஜராத்தில் உளவு பார்த்த கலையை மோடி தான் செய்தார் என்றார்.

ALSO READ:  தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த புயல்? எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.