விவசாயி தற்கொலையில் மர்மம்: கடிதம் கிளப்பும் சந்தேகம்

Published:

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலைக்குக் காரணமாக, உரிய நிவாரணம் கிடைக்காததுதான் என கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தக் கடிதத்தை கஜேந்திர சிங் எழுதவில்லை எனவும் அதில் உள்ளது அவரது கையெழுத்து இல்லை எனவும் கஜேந்திர சிங்கின் சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கஜேந்திர சிங் தற்கொலை விவகாரத்தில், இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img