புதுதில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அங்கே மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலைதான், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, அதன் சேவையைப் புகழ்ந்தும், தில்லி மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரனைப் பாராட்டியும் டிவிட்டர் பதிவிட்டார்.

