கருர்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மணிகூண்டு அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதற்கு அப்பகுதியில் நான்கு சாலைகள் சந்திப்பதும் எந்த சாலையும் ஒருவழி சாலையாக மாற்றப்படாமல் இருவழி சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதை மாற்றி அமைப்பதால் ஓரளவுக்கு நெரிசல் தவைக்கப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் வைத்துள்ள பாரிகார்ட் சாலையில் செல்வோருக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதால் அவர்கள் சாலையிலேயே நடந்து செல்கின்றனர். ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் நடை மேம்பாலத்தை யாரும் பயன்படுத்த மறுப்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் மணிக்கூண்டு அருகே உள்ள கடை உரிமையாளர்கள் சாலையிலேயே தங்களது வாகனனகளை நிறுத்துவதாலும் நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்து உடனடியாக வேகத்தடை மற்றும் சாலை விஸ்தரிப்பு செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

